Declare Srilanka as “Genocide Country” – Press Note இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் அரசாகத் தமிழ்நாடு சட்டமன்றம் உடனடியாக அறிவிக்க வேண்டும் மே 17 இயக்கம் தமிழ்நாடு 2010ஜனவரி 6 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறது. ஈழத்தில் நடந்து முடிந்த இனஅழித்தலிற்குப் பிறகு கூடும் இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. இதற்கு முந்தைய கூட்டத் தொடரானது ஜூன் – ஜூலை மாதங்களில் 26 நாட்கள் நடைபெற்றது. இலங்கையில் அந்நாட்டு அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாகநிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தி “”அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது – இந்தியப்பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்” என்ற தலைப்பில் 2009 ஜனவரி 23 ஆம் தேதியன்று முதல்வர்தலைமையில் தீர்மானம் இயற்றி சரியாக ஒரு ஆண்டு கழிந்து விட்ட நிலையில் கூடும் முதல்சட்டமன்றக் கூட்டத் தொடர் இது. இலங்கையில் நடந்த, இன்னமும் தடையின்றி நடத்தப்பட்டுவரும் தமிழ் இனப் படுகொலையில்முக்கியப் பங்காற்றியுள்ள ராஜபக்சாவும், சரத் பொன்சேகாவும் அந்த நாட்டில் ஜனவரி 26 ஆம்தேதியன்று நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்தத் தேர்தலுக்கு முன்பாகத்தமிழ் நாட்டில் கூடும் சட்டமன்றத் தொடர் இது என்பதால் இது வரலாற்று முக்கியத்துவத்தைப்பெறும் ஒரு தொடராக அமைகின்றது. மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்கள் மத்தியில் – இலங்கையா? ஈழமா? எதுஇனப் பிரச்சனைக்குத் தீர்வு – என்பதை அறியும் வெளிப்படையான வாக்கெடுப்பு நடந்து முடியவுள்ளநாட்களில் கூடும் சட்டமன்றத் தொடர் இது. அவர்களின் முடிவுக்கு உதவுவதற்கான தக்க நடவடிக்கைஒன்றைத் தமிழ்நாட்டு மக்களும், அவர்தம் அரசியல் பிரதிநிதிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இந்த சட்டமன்றத் தொடர் கூடுகிறது. இந்த சட்டமன்றத் தொடரில் ஈழத் தமிழ் மக்களின் துயரத்திற்கு முடிவு கட்டக்கூடிய ஒருநடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் அவர்களின் எதிர்காலம் நிரந்தரமானதொரு இருளைச்சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர வேண்டிய அவசியமான நேரம் இதுவே. ஈழத் தமிழ் மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற கடந்த ஓராண்டுகாலமாகத் தமிழக சட்ட மன்றமும், அதில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகளும்தவறிவிட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்தக் கடைசி நேரத்திலாவது ஈழத்தில் வாழும்தமிழ் மக்களைக் காப்பாற்ற அவை என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதற்கான நேரம்இதுதான். அடுத்து வரும் நாட்களில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் முன்பாகக்கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளும், சட்டமன்றமும் இந்தப் பிரச்சினையில்எவ்வளவு தூரம் தன்னலம் மிகுந்தும், அசிரத்தையாகவும், பாராமுகமாகவும் இருந்து வந்துள்ளார்கள்என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில்,அடுத்துவரும் நாட்களிலாவது இந்தக் கடந்தகாலத் தவறை மீண்டுமொருமுறை செய்துவிடக்கூடாதல்லவா? ...
Yearly Archives: 2009
28 நவம்பர் 2009 ஈழம், லால்கர், திபெத் ஆகியவற்றில் நடந்துவரும் மனித உரிமை மீறல்களையும், படுகொலைகளையும் இருட்டடிப்புச் செய்து, ஊடக அறனிற்கு எதிராக தி இந்து நடந்து கொள்கிறது என்று ...
“MEDIA TERRORISM” Seminar on ” media responsibility: Why THE HINDU & Its EDITOR CHEATING PEOPLE & NATION ” on 01 Nov 2009 ...
— இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல ...
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழத் தேசிய சுதந்திரப் போரில் வீர மரணத்தைத் தழுவிக் கொண்ட எமது விடுதலை வீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நளாக கார்த்திகை ...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1989 “எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக ...
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். கார்த்திகை 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள் தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் ...
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் ...
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2006. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் ...
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2005. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் ...
தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2004 எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று ஒரு புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது ...
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2003. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். இன்றைய நாள், வணக்கத்திற்குரிய புனித நாள். ...
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 27.11.2001 எனது அன்பிற்கும் மதிப்பிற்கு முரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். விடுதலை வேண்டிக்களமாடி வீழ்ந்த எமது வீரப்புதல்வர்களை ...
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 27.11.2002 எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, இன்றைய நாள் ஒரு புனித நாள்.எமது மாவீரர்களின் நினைவு நாள். எமது ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்