தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து, இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை இன்று (28-02-2023 செவ்வாய்) காலை மே பதினேழு இயக்கம் முற்றுகையிட்டது!
தமிழ் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்ய வேண்டும், மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசு கண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் காசி. புதியராஜா உள்பட, பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தோழர்கள் என பலர் பங்கேற்று கைதாகினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து,
இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!
நாளை (28-03-2023 செவ்வாய்) காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவோம்!
தமிழர்களே! நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம்!
* தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்!
* நம் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசை கண்டிப்போம்!
* தமிழக அரசே பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கிடு!
மே பதினழு இயக்கம்
9884864010
திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
அரங்கு எண்: 83
அரசியல், சமுகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரங்கில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருக.
தொடர்புக்கு: 8939782116
]]>மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு மு. கருணாநிதி அவர்களுக்கு வங்கக்கடலில் தமிழ்நாடு அரசு சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி 31 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அந்த கூட்டத்தின் குறிப்புகள் (Minutes of Meeting) என்று ஓர் ஆவணம் வெளியாகியது. அதில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு, பேனா சின்னம் அமைக்க ஆதரவளிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, பேனா சின்னத்தை கடலில் அமைக்க மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கவில்லை என்னும் நிலைப்பாட்டை விளக்கி, சென்னை மாவட்ட ஆட்சியர் திருமிகு அமிர்தஜோதி அவர்களை 24-02-2023 வெள்ளி அன்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து, கருத்துக்கேட்பு கூட்டத்தின் கருத்தை திருத்திக்கொள்ளுமாறு கடிதம் அளித்தார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>“தேசியத் தலைவரும் தமிழீழமும்: அரசியலும் தீர்வும்” என்னும் கருத்தரங்கம் கடந்த 19-02-2023 ஞாயிறு மாலை சைதாப்பேட்டை அண்ணாமலை மகாலில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள், மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்கள் கருத்துரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தமிழரை சுட்டுக்கொன்ற கர்நாடகா! கர்நாடக வனத்துறையினரின் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! குற்றவாளி கர்நாடக வனத்துறையினரை உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்
சேலம் மாவட்டத்தின் கர்நாடக எல்லை அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்பவர் உயிரிழந்துள்ளார். மீன்பிடித்ததற்காக தமிழர்களை சுட்டுக்கொல்லும் அளவிற்கு கர்நாடக அதிகாரிகளிடம் இனவெறி போக்கு அதிகரித்துள்ளது வருந்தத்தக்கது. தமிழர்கள் மீது வன்மத்துடன் துப்பாக்கி சூடு நடத்தி தமிழரை கொலை செய்த கர்நாடகாவின் இந்த காட்டுமிராண்டி செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக எல்லைப்பகுதியதாக உள்ளது பாலாறு. இந்த பாலாறு காவிரியில் கலக்கும் நீர்ப்பகுதியில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாட்டு மீனவர்கள் காலங்காலமாக பரிசலில் மீன்பிடித்து வருவது வழக்கம். அப்படியாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இரவு கொளத்தூர் கோவிந்தப்பாடியை சேர்ந்த காரவடையான் என்ற ராஜா உள்ளிட்ட 7 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். அதில் ராஜா மட்டும் திரும்பவில்லை. இந்நிலையில், 16-ம் தேதி அவரது உடல் பாலாற்றங்கரையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக மீன்பிடிக்கும் எல்லை வனப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதும் அதில் ராஜா என்பவர் உயிரிழந்துள்ளதும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. கர்நாடக பகுதிக்குள் மீன்பிடிக்க தடையுத்தரவு உள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதில்லை. இருந்தும் தமிழர்கள் மீது எல்லைப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்துள்ளது கர்நாடக வனத்துறையினரின் தமிழர்கள் மீதான வன்மத்தையே காட்டுகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்திருந்தாலும் கொலை செய்யுமளவிற்கு கொடிய குற்றமல்லவே. மேலும், கர்நாடக வனத்துறையினர் இதற்கு முன்னரும் இதுபோல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்ற தகவல், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடுஞ்செயல் என்பதையே காட்டுகிறது.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழர்கள் மீது கர்நாடகா நீண்டகாலமாகவே வன்மத்துடன் தாக்குதல் நடத்திவந்துள்ளது. காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்யும் அதிகப்படியான மழை காரணமாக இப்பிரச்சனை சில ஆண்டுகளாக இல்லாத நிலையில், தமிழ்நாடு-கர்நாடக இடையே புதியதொரு பிரச்சனையை ஆளும் கர்நாடக பாஜக அரசின் மூலம் ஒன்றிய பாஜக அரசு உருவாக்க முனைகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கை வளர்ப்பதன் மூலம் மாநிலங்களிடையே ஒற்றுமையை தடுத்து, மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு அதிகாரத்தை செலுத்த முனைகிறது.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்வதை வேடிக்கை பார்க்கும் இந்திய ஒன்றிய அரசு, சமீபத்தில் தனது கடற்படையை கொண்டே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது கர்நாடக வனத்துறையினர் மூலம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, கர்நாடக எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை உருவாக்க நினைக்கிறது. தமிழர்கள் மீதான வெறுப்பை வளர்த்தெடுப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக அரசியல் லாபம் அடைய முயற்சிக்கிறது. இந்திய ஒற்றுமை பேசும் பாஜக அரசு, தமிழர்கள்-தமிழ்நாட்டுடன் மட்டும் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன, தமிழர்களை இந்தியர்களாக கருதுவதில்லையா, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதுவதில்லையா என்ற கேள்வி எழுகிறது.
கர்நாடக வனத்துறையினரின் இந்த போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த கர்நாடக வனத்துறையினரை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தமிழ்நாட்டு வனப்பகுதி நீர்நிலைகளில் தமிழர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதை உறுதி செய்திட வேண்டும். எல்லைப்பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நிரந்தரத் தீர்வை கண்டறிய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
“தேசியத் தலைவரும் தமிழீழமும் – ஈழம் அரசியலும் தீர்வும்” என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்.
நாள்: பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு
இடம்: அண்ணாமலை மகால், ரெட்டிக்குப்பம் ரோடு,
சைதாப்பேட்டை, (அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில்)
சென்னை
தேசியத்தலைவரைப் பற்றிய போலிகளின் சினிமா கதைகளையும், மாயாவி கதைகளையும் கடந்து ஈழ அரசியல் பேசுவோம்.
போராளிகளுக்கும், ஈழத்திற்கும் எதிராக அவதூறுகளை மார்க்சியத்தின் (அல்லது மா-லெ) பெயரில் வெளிப்படுத்தப்படும் பார்ப்பனிய குடுமிகளின் வன்மத்தை எதிர்கொள்ளும் தர்க்கத்தை நிகழ்த்துவோம்.
‘இலங்கைத்தமிழருக்கு அதிகாரப்பகிர்வு’ என்று வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், திராவிடர் இயக்க கொள்கையையும் நிராகரிக்கும் திட்டங்களையும் புரிந்து கொள்வோம்.
இனப்படுகொலைக்கு நீதி கேட்போம்.
இன விடுதலைக்கு குரல் கொடுப்போம்.
தமிழீழத்தை நேசிக்கும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரும் வருக!
மே பதினேழு இயக்கம்
9884864010
“வடவர் வருகையும் தமிழ்நாடும்” – என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி (செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் ) இன்று (14-02-2023 செவ்வாய்) மாலை 6 மணியளவில், தாம்பரம் SGS மஹாலில் ஒருங்கிணைத்துள்ளது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றுகிறார். அனைவரும் வருக.
மே பதினேழு இயக்கம்
9884864010
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உட்பகுந்து ஜனநாயக சக்திகளை கொடூரமாக தாக்கிய ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்
நேற்று (12.02.2023) ஞாயிற்றுக்கிழமை ஒரிசா மாநிலம் புவனேஸ்வரியில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அமைப்பு சட்டமும் கல்வியும்’ என்கிற தலைப்பில் அரைநாள் கருத்தரங்கை ஒரிசாவை மையமாகக் கொண்ட குடிமக்கள் இயக்கமும், தமிழகத்தின் வான்முகில் அமைப்பும் இணைந்து நடத்தி இருக்கிறது.
இந்த கருத்தரங்கில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்த்த பேராசிரியர் சுர்ஜித் மஜீம்தார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி இருக்கிறார். அவர் பேச ஆரம்பிக்கும் பொழுது வேண்டுமென்றே அரங்கிற்குள் இருந்த சிலர் கூச்சலிட்டு கருத்தரங்கில் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
உடனே பேராசிரியர் சுர்ஜித் மஜிம்தார் அவர்கள் உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்கள் பதில் சொல்கிறேன். ஏன் தேவையில்லாமல் கூச்சலிடுகிறீர்கள் என்றும், கேள்வி பதில் என்ற ஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது அதில் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
இதனால் சந்தேகமடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் கூச்சலிட்டவர்களிடம் உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் நீங்கள் எந்த கல்லூரி மாணவர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் அடையாள அட்டையை கொடுக்காமல் விழா ஏற்பாட்டாளர்களை தாக்கி ஆரம்பித்து அரங்கையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை தடுக்க முயன்ற வான்முகில் அமைப்பின் செயற்பாட்டாளர் தோழர் பிரிட்டோ உட்பட, வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
தோழர் பிரிட்டோ தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்தவர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயல்படுபவர். நீண்டநாள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டிலிருந்து சென்ற தோழர் பிரிட்டோ வன்முறையாளர்களை தடுக்கமுயன்ற போது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
இறுதியில் கூச்சலிட்டவர்களை விசாரிக்கும் பொழுது அவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் ஆர்எஸ்எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-ஐ சேர்ந்தவர்கள் என்றும், இந்த கருத்தரங்கை நடக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உள்ளே நுழைந்தவர்கள் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் மாணவர்களே இல்லை என்பதும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் இந்த கொடூர தாக்குதலில் விழா ஏற்பாட்டுளர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பேர் மருத்துவமனையில் சேரும் அளவிற்கு கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். கலவரம் செய்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது என்றாலும் கலவரத்தை தூண்டிய ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களில் நடைபெறும் இது போன்ற கருத்தரங்குகளை நடத்தவிடாமல் செய்வதே ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் நோக்கமாக உள்ளது. முற்போக்கு கருத்துக்கள் மாணவர்கள் மத்தியில் விவாதிக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. டில்லி நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என இவர்கள் தொடர்ச்சியாக கலவரங்களை உண்டுபண்ணி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் இத்தகைய அராஜக போக்கு உடனடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் ஏபிவிபி தடை செய்யப்பட வேண்டும். ஒரிசாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அதற்கு பின்னணியாக செயல்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தாக்கப்பட்ட தோழர் பிரிட்டோ உள்ளிட்டவர்களுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக நிற்கும் என கூறிக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010