- in பரப்புரை

இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும்  அரசாகத் தமிழ்நாடு சட்டமன்றம் உடனடியாக அறிவிக்க வேண்டும்   
                 
மே 17 இயக்கம்
தமிழ்நாடு
 
2010ஜனவரி ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறதுஈழத்தில் நடந்து முடிந்த இனஅழித்தலிற்குப்  பிறகு கூடும் இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இது.
இதற்கு முந்தைய கூட்டத் தொடரானது ஜூன் – ஜூலை மாதங்களில் 26 நாட்கள் நடைபெற்றது.  
இலங்கையில் அந்நாட்டு அரசால் திட்டமிட்டு நடத்தப்படும்  தமிழினப் படுகொலையை உடனடியாகநிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள   
வேண்டும் என்று வலியிறுத்தி “”அய்யகோஇலங்கையில் தமிழ் இனமே அழிகிறது – இந்தியப்பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்” என்ற தலைப்பில் 2009 ஜனவரி 23 ஆம் தேதியன்று முதல்வர்தலைமையில் தீர்மானம் இயற்றி சரியாக ஒரு ஆண்டு கழிந்து விட்ட நிலையில் கூடும் முதல்சட்டமன்றக் கூட்டத் தொடர் இது.
இலங்கையில் நடந்தஇன்னமும் தடையின்றி நடத்தப்பட்டுவரும் தமிழ் இனப் படுகொலையில்முக்கியப் பங்காற்றியுள்ள ராஜபக்சாவும்சரத் பொன்சேகாவும் அந்த நாட்டில் ஜனவரி 26 ஆம்தேதியன்று நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்அந்தத் தேர்தலுக்கு முன்பாகத்தமிழ் நாட்டில் கூடும் சட்டமன்றத் தொடர் இது என்பதால் இது வரலாற்று  முக்கியத்துவத்தைப்பெறும் ஒரு தொடராக அமைகின்றது.
மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்கள் மத்தியில் – இலங்கையாஈழமாஎதுஇனப் பிரச்சனைக்குத் தீர்வு – என்பதை அறியும் வெளிப்படையான வாக்கெடுப்பு நடந்து முடியவுள்ளநாட்களில் கூடும் சட்டமன்றத் தொடர் இதுஅவர்களின் முடிவுக்கு உதவுவதற்கான தக்க நடவடிக்கைஒன்றைத் தமிழ்நாட்டு மக்களும்அவர்தம் அரசியல் பிரதிநிதிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இந்த சட்டமன்றத் தொடர் கூடுகிறது.
இந்த சட்டமன்றத் தொடரில் ஈழத் தமிழ் மக்களின் துயரத்திற்கு முடிவு கட்டக்கூடிய ஒருநடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் அவர்களின் எதிர்காலம் நிரந்தரமானதொரு இருளைச்சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர வேண்டிய அவசியமான நேரம் இதுவே.    
ஈழத் தமிழ் மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற கடந்த ஓராண்டுகாலமாகத் தமிழக சட்ட மன்றமும்அதில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகளும்தவறிவிட்டிருக்கின்றன என்பதுதான் உண்மைஇந்தக் கடைசி நேரத்திலாவது ஈழத்தில் வாழும்தமிழ் மக்களைக் காப்பாற்ற அவை என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதற்கான நேரம்இதுதான்
அடுத்து வரும் நாட்களில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றும்  முயற்சியில் ஈடுபடும் முன்பாகக்கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளும்சட்டமன்றமும் இந்தப் பிரச்சினையில்எவ்வளவு தூரம் தன்னலம் மிகுந்தும்அசிரத்தையாகவும்பாராமுகமாகவும் இருந்து வந்துள்ளார்கள்என்பதை அறிந்து கொள்வது அவசியம்ஏனெனில்,அடுத்துவரும் நாட்களிலாவது இந்தக் கடந்தகாலத் தவறை மீண்டுமொருமுறை செய்துவிடக்கூடாதல்லவா?
———————–
ஈழத் தமிழர் இனப்படுகொலையும்  தமிழக சட்டமன்ற  அரசியல் கட்சிகளும் மக்களவைத்தேர்தலிற்குப் பிறகு மே 22 ஆம் தேதியன்று காங்கிரஸ் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சிஅமைத்தது.
மே 23 ஆம் தேதியன்று .நா.சபையின் தலைவர் பான் கி மூன் வன்னியில் முள்வேலிமுகாம்களுக்குள் அடைக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களை சந்தித்தார்.  ”உலகம் முழுதும் உள்ள பலஅகதிகள் முகாம்களுக்கு நான் சென்று வந்திருக்கிறேன்ஆனால் இங்கு உள்ளதைப்போலகொடூரமான சூழலில் அமைந்துள்ள முகாமை நான் கண்டதில்லை” என்று அவர் கூறினார்.
மே 27 ஆம் தேதியன்று ஜெனிவாவிலுள்ள .நா.சபையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில்நடந்த படுகொலைகளை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்ததுஆனால் அந்தத் தீர்மானத்தை இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட முடிவெடுத்தஇந்தியசீனரஷ்ய அரசுகளின் தலைமையிலான கூட்டணி அரசுகள் முறியடித்தனகாங்கிரஸ்கூட்டணி அரசின் தமிழ் இன எதிர்ப்புப் போக்கினை ஜூன் மாதம் கூடிய தமிழக சட்டமன்றம்கண்டிக்கவில்லை.
இருப்பினும் ஜூன் ஆம் தேதியன்று இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நடத்தவேண்டும் என்று மீண்டும் ஒரு முறை பான் கி மூன் தெரிவித்தார்.
ஈழப்போரின் கடைசி சில நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேலான அப்பாவித் தமிழ் மக்களைசிங்கள இராணுவம் கொன்று குவித்தது என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரங்களை இங்கிலாந்துநாட்டின் டைம்ஸ் ஆன்லைன்” பத்திரிகை மே 29 ஆம் தேதியன்று வெளியிட்டதுஇந்தஆதாரங்களின் அடிப்படையில்இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை மீதானவெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக பாராளுமன்றஉறுப்பினர்கள் ஜூன் மாதம் கோரிக்கை வைத்தனர்ஆனால்இலங்கை அரசுக்கு .நா. மனிதஉரிமை மன்றத்திலேயே துணை போகத் துணிந்த இந்திய அரசுஅந்தக் கோரிக்கையை இன்று வரைகண்டுகொள்ளவில்லைகேள்வியை முன்வைத்தத் தமிழக உறுப்பினர்களும் தங்களின்வேண்டுகோளை ஏன் மத்திய அரசு ஏற்கவில்லை என்ற கேள்வியைத் தொடுத்து உரிமைக்காகப்போராடவுமில்லை.
ஆகஸ்டு 25 ஆம் தேதியன்று தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும்கொடூரமான வீடியோ ஆவணம் ஒன்றை இலங்கையில் நடந்துவரும் தமிழ் இனப்படுகொலைக்குஆதாரமாக இங்கிலாந்து நாட்டின் சேனல் தொலைக்காட்சி வெளியிட்டதுதமிழக சட்டமன்றக்கட்சிகள் இதையும் அசிரத்தையாகவே கைகொண்டனர்.
சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னி நிலத்தில் இலங்கை அரசு மேற்கொள்ளவிருக்கும்வேளாண் பணிகளுக்கு உதவுவதற்காக செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஆறு பேர் அடங்கிய நிபுணர்குழு ஒன்றினை இந்திய அரசு அனுப்பி வைத்ததுஅதில் நான்கு பேர் தமிழர்கள்அவர்கள் தமிழர்கள்என்ற ஒரே காரணத்திற்காகஅவர்களை இந்திய அரசின் பிரதிநிதிகள் என்றும் பாராதுமுள்வேலிமுகாம்களுக்குள் அடைக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க சிங்கள அரசு அனுமதி மறுத்துஅவமதித்ததுஇதன் பின்னரும் கூடஇந்திய அரசு இலங்கை அரசின் போக்கைக் கண்டிக்கமுன்வரவில்லைஇலங்கை அரசின் இந்த அவமதிப்பு நடவடிக்கையைத் தமிழக சட்டசபையில் எந்தஅரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லைஇருப்பினும்இவற்றை எல்லாம் பிற நாடுகளின் அரசுகள்கவனிக்கத் தவறவில்லைஇலங்கையில் தமிழ் இனப்படுகொலை தொடர்பாக இதுவரை வெளிவந்தபல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் அக்டோபர் 19 ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியமும்,அக்டோபர் 22 ஆம் தேதியன்று அமெரிக்க அரசும்மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க் குற்றங்கள்இழைத்ததாக  இலங்கை  அரசின் மீது குற்றம் சாற்றி அறிக்கை வெளியிட்டன.(அரசைஇனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாக சுட்டிக்காட்டும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டன இனப் படுகொலை என்று அவைகள் கூறவில்லை).
சிங்கள இனவெறி அரசால் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட தமிழ் மக்களையும்,இனவெறி ஜனாதிபதி மகிந்த ராசபக்சாவையும் தி.மு.கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்அக்டோபர் மாத இடைப்பகுதியில் சந்தித்து விட்டுத் திரும்பிய நாட்களில் அந்த இரு அறிக்கைகளும்வெளிவந்தன.
எங்கள் அறிக்கையைக் காட்டிலும் உங்களது அறிக்கையானது  சிங்கள அரசு மேற்கொண்டுவரும்மனித உரிமை மீறல்போர்க் குற்றங்கள் ஆகியன உலக அரசுகளுக்கும்மக்களுக்கும் தெரிவிக்கும்ஒன்றாக இருக்க வேண்டும்” என்பதைப் போருக்குப் பிறகு இலங்கைக்கு முதல் முதலாகச் சென்றஇந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிப்பதற்காகத்தான் அந்த இரு அறிக்கைகளும்அவர்களது இலங்கைப் பயணம் நிறைவடைந்த ஒருவார காலகட்டத்துக்குள் வெளிவந்தன.
இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின்அமெரிக்க அரசின் குறிப்புகளை பாராளுமன்றக் குழுவினர்கண்டு கொள்ளவில்லைமத்திய அரசிடம் அவர்கள் அளித்த அறிக்கையின் விவரங்கள் என்னஎன்பதை அவர்கள் இன்றுவரை வெளியிடவில்லைஇருப்பினும்முள்வேலி முகாம்களில்அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் சந்தித்துவரும் சித்திரவதையைசிங்களவர்களில் உள்ள சில மனிதாபிமானம் மிக்கவர்கள் வெளிப்படையாகப் பேசத் தவறவில்லை.
மே 14 ஆம் தேதியன்று வவுனியாவில் உள்ள முள்வேலி முகாம்களில் இருந்த தமிழ் மக்களைப்பார்த்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா “ இவர்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம்இலங்கையின் நீதிஅமைப்பில் இவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதே இல்லைஇதைக் கூறுவதற்காக நான் தண்டிக்கப்படலாம்” என்று ஜூன் ஆம் தேதிவெளிப்படையாக அறிவித்தார்
சிங்கள அறிவுஜீவிகளால் நடத்தப்பட்டுவரும் Groundviews என்ற ஆங்கிலப் பத்திரிகையானது ஜூலைஆம் தேதியன்று முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரடியாகக் கண்டறிந்தஒருவரின் அனுபவத்தை வெளியிட்டதுhttp://www.groundviews.org/2009/07/02/an-eye-witness-account-of-idp-camp-conditions-in-sri-lanka/சிங்களத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தக் கட்டுரை தமிழ்மக்களை அடைத்து வைத்துள்ள முள்வேலி முகாம்கள், ஹிட்லரின் சித்திரவதைக் கொட்டடிகள்தாம்என்பதை உலகுக்கு உணர்த்தின.
ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று பேசிய அமெரிக்க அரசின் செயலாளரானஹிலாரி கிளிண்டன் “ இலங்கை அரசானது கற்பழிப்பை ஆயுதமாகப் பயன்படுத்திவருகிறது “ என்றுகூறினார்http://www.egovmonitor.com/node/29093
அவரைத் தொடர்ந்து,  இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு செயலான ரால்ப் மிலிபேணட் அக்டோபர் 14ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் “ முகாம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதுஇந்தநிலை தொடருமானால் வரும் காலங்களில் இங்கிலாந்து அரசு அனைத்து நிதி உதவிகளையும்நிறுத்திக் கொள்ளும்” என்று எச்சரித்தார்.   http://www.irinnews.org/Report.aspx?ReportId=86712
அவரது வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாக இருக்கவில்லைஇலங்கையில் இருந்து ஐரோப்பியஒன்றியத்திற்கு ஏற்றுமதியாகும் பின்னலாடைகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 17 ஆம் தேதியன்று தற்காலிகமாக விலக்கிக் கொண்டது.http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=71064
சமாதான வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்களையும் அவர்களின்குடும்பத்தினரையும் படுகொலை செய்யச் சொல்லி இலங்கை ராணுவத்தின் 58 ஆவது டிவிஷனின்தலைவரான பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டது இலங்கை ஜனாதிபதியின்சகோதரரும்இராணுவ அமைச்சகத்தின் செயலருமான கோத்தபாயா ராஜபக்சாதான் என்றுஇலங்கை ராணுவத்தின் தலைவராக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா டிசம்பர் 12 ஆம் தேதியன்றுஇலங்கையின் சண்டே லீடர் அளித்த நேர்காணலில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
முகாமில் அடைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து நாட்டின் தமிழ் பிரஜையான வாணி குமார் டிசம்பர் 20ஆம் தேதியன்று இங்கிலாந்து நாட்டின் அப்சர்வர் பத்திரிகைக்குக் கொடுத்த நேர்காணலில்முகாமில்உள்ள ஒவ்வொரு தமிழச்சியும் எவ்வாறு கற்பழிப்பு சித்திரவதைக்கு சிங்கள அதிகாரிகளாலும்,ராணுவத்தினராலும் உள்ளாக்கப் பட்டனர் என்பதை விவரித்து உள்ளார்அவரது கூற்றைஉண்மைதான் என்று இலங்கை அரசின் மனித உரிமை அமைச்சகத்தின் செயலாளரான ராஜீவ் விஜயசேகர ஒத்துக் கொள்ளவும் செய்திருக்கிறார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் டிசம்பர் 21 ஆம் தேதியன்று .நா.சபை மீண்டும் இந்தப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறதுமுதல் கட்டமாக, ”வெள்ளைக் கொடியுடன் சரணடையவந்த புலிகள் இயக்கத்தின் மூன்று தலைவர்களையும்அவர்தம் குடும்பத்தினரையும் நீங்கள் என்னசெய்தீர்கள்?” என்ற கேள்வியை அது இலங்கை அரசுக்கு விடுத்திருக்கிறது.
இவை எவற்றையும் தமிழக அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.
ராஜ்ய சபையில் டிசம்பர் ஆம் தேதி சி.பி.தலைவர் டி.ராஜா இலங்கையில் நடந்துவரும்இனப்படுகொலை குறித்து பேசியபோது இனப்படுகொலை” என்ற வார்த்தையை அவைக்குறிப்பில்இருந்து நீக்க வேண்டும் என்று அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்
ராஜ்ய சபை அவைத் தலைவரின் தமிழ் இன எதிர்ப்பு நடவடிக்கையை எதிர்த்துத் தமிழக அரசியல்கட்சி ஒன்றுகூடக் குரல் கொடுக்க முன்வரவில்லை.
——————————–
ஈழத் தமிழர் இன சுத்திகரிப்புக்கான  இலங்கை அரசின் நடவடிக்கைகளும்   தமிழக சட்டசபை அரசியல் கட்சிகளும்
போர் 2009 மே மாதம் 18 ஆம் தேதியன்று முடிவடைந்ததுஇந்தப் போரில் சுமார் லட்சத்து 40ஆயிரம் வன்னித் தமிழ் மக்கள் காணாமல் போயினர்சுமார் லட்சத்து 80 ஆயிரம் பேர் இலங்கைஅரசால் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு அடைக்கப்பட்ட அடைக்கப்படவிருந்த மக்களின் மறுவாழ்வுக்காகவென்று வடக்கின்வசந்தம்  என்ற திட்டத்தை இலங்கை அரசு ஏப்ரல் 2009 இல் முன் வைத்ததுவன்னி மக்களின்மறுவாழ்வு என்ற சாக்கில் – போரின் மூலம் தான் கைப்பற்றப்போகும் வன்னிப் பெருநிலத்தையும்,ஏற்கனவே தன் அதிகாரத்தின் கீழ் உள்ள யாழ்குடா பகுதியையும் சிங்கள நிலப்பகுதியாக எவ்வாறுமாற்றி அமைப்பது என்பதே அந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்குழுவினை 2009 மே ஆம் தேதியன்றுஇலங்கை அரசு ஏற்படுத்தியதுஜனாதிபதியின் தம்பியும்ஆலோசகரருமான பசில் ராஜபக்சாவின்தலைமையிலான 19 பேரைக் கொண்ட அந்தக் குழுவில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை என்பதேஅந்தத் திட்டத்தின் உண்மை நோக்கத்தைப் புரிய வைப்பதாக அமைந்தது.
இந்த செயற்குழுவானது மூன்று நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டது:
l               வட ஈழத்தில் இராணுவ முகாம்களை நிறுவுவதும்சிங்களர்களைக் கொண்ட சிவில்நிர்வாகத்தை நிறுவுவதும்கண்ணி வெடிகளை அகற்றுவதும் இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம்.
l               முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீண்டும் வன்னி நிலத்தில்குடியேற்றுவதும்அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை நிறுவுவதும் இரண்டாம்நோக்கம்.
l               வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகராட்சித் தேர்தலை நடத்துவதும், 13 ஆவது அரசியல்சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதும் மூன்றாம் நோக்கமாகும்.
வடக்கின் வசந்தம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்ட மறு நாளே இந்திய அரசுஇந்தத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி உதவியை அறிவித்ததுமே 23 ஆம் தேதியன்று இந்தத்தொகை 500 கோடி ரூபாயாகக் கூட்டப்பட்டதுஜூன் 25 ஆம் தேதி இலங்கை ஜனாதிபதியின்தம்பியும்அந்த நாட்டின் நிழல் ஜனாதிபதியாக செயல்பட்டுவரும் பசில் ராஜபக்சா புதுதில்லிவந்திருந்த போது இந்தத் தொகையை 1000 கோடி ரூபாயாக உயர்த்தவும் மன்மோகன் அரசுமுன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாயின.
தமிழ் மக்களை உள்ளடக்காத வடக்கின் வசந்தம் திட்டத்தின் நிர்வாகக் குழுவை எதிர்த்து தமிழகசட்டசபையோஅதன் அரசியல் கட்சிகளோ வாய் திறக்கவில்லைமாறாகசிங்களர்களின்தலைமையில் அமைந்த நிர்வாகக் குழுவிற்கு இந்திய அரசு அளித்த அங்கீகாரத்தை தமிழக ஆளும்கட்சி எவ்விதக் கேள்வியும் இன்றி ஆமோதித்ததுஇந்த அடிப்படைத் தவறே அதனை மேலும் பலதவறுகளை இழைக்கத் தூண்டுவதாக அமைந்து விட்டது.
ஜூன் – ஜூலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த வேளையில் இலங்கைத்தூதுவரான ரோமேஷ் ஜெயசிங்கேவின் தலைமையில் ஒரு ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது.ஜூலை ஆம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில் இந்து ராம்துக்ளக் சோ போன்றவர்கள் கலந்துகொண்டனர்இவர்களைத் தவிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும்இராணுவ ஆய்வாளருமானலெப்டினண்ட் ஜெனரல் V.R. ராகவன் கலந்து கொண்டு பேசினார்சிங்கள ராணுவத்தால்ஆக்கிரமிக்கப்பட்ட வன்னி நிலப்பகுதியில் அடுத்து வரும் சில மாதங்களிலேயே சிங்கள ராணுவம்மற்றும் காவல்துறையைச் சேர்ந்த சுமார் லட்சத்து 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படலாம் என்றதகவலை வெளியிட்டார்அவரது கருத்தை அந்த ஆய்வரங்கத்தில் இருந்த இலங்கைத் தூதர்மறுக்கவில்லைஜூலை 15 ஆம் தேதியன்று இதே கருத்தை சரத் பொன்சேகாவும் வெளியிட்டார்.http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=11946&cat=1
தமிழர்களுக்குச் சொந்தமான பகுதியில் சிங்களக் குடியேற்றத்தையும்ராணுவமயமாக்கலையும்உறுதிப்படுத்தும் இந்தக் கருத்துக்களை அப்போது நடந்து கொண்டிருந்த தமிழக சட்டமன்றம் கருத்தில்கொள்ளவில்லைஎனவேஈழ மக்களின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறிக்கும் சிங்கள இனவெறிஅரசின் திட்டத்தை எதிர்த்து எவ்விதத் தீர்மானத்தையும் அவையில் கொண்டுவர இயலவில்லை.
வடக்கின் வசந்தம் என்ற நயவஞ்சகத் திட்டத்தினைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயேஅக்டோபர் ஆம் தேதியன்று சீனாவுக்கு ராஜபக்சா அரசினால் அவசர அவசரமாகக் கொடுக்கப்பட்டசாலை மற்றும் ரயில் பாதை ஒப்பந்தங்களை தமிழக அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை.பாளைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் ரயில் பாதையை அமைப்பதற்கும்வட ஈழத்தின்அனைத்து சாலைகளையும் செப்பனிடுவதற்குமான ஒப்பந்தத்தை சீன அரசு நிறுவனங்களுக்குத்தமிழ் மக்கள் எவரையும் கேட்காமலேயே ராஜபக்சா அரசு அளித்ததுஇந்தப்பணிகளை செயல்படுத்தசீனர்கள் பெருமளவில் வட ஈழ நிலத்திற்கு வந்துள்ளனர்அவர்களது செயல்பாடுகள் சாலைப்பணிகளோடு நின்றுவிடுமா அல்லது தமிழ் மக்களை எதிர்காலத்தில் முற்றிலுமாக ஒடுக்குவதற்கானதிட்டமிடலில் சிங்கள அரசுடன் அவர்களது செயல்பாடுகள் கைகோர்க்குமா என்பதுதான் இன்று கேள்விக்குறியாக உள்ளது.
ஜூன் மாதம் தொட்டு  முகாம்களில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோஷமேதமிழகத்தில் ஓங்கி ஒலித்ததுஆனால்முகாமில் இருந்து புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டுகாணாமல் போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதக்கவலையையும் கொள்ளவில்லைசிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த போராளிகளை சர்வதேச போரியல் சட்டங்களின் அடிப்படையில் போர்க்கைதிகளாகத்தான் பாவிக்கவேண்டும் என்ற கருத்தை சர்வதேச அளவில் மனித உரிமை இயக்கங்கள் வலியுறுத்தின.சிங்கள அரசின் சித்திரவதைக் கொட்டடிகளில் வீழ்ந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்இளைஞர்களைக் காக்கும் அந்த அதி முக்கியக் கருத்தையும் தமிழக சட்டசபைக் கட்சிகள்கண்டுகொள்ளாமல் இருந்து விட்டன.
முள்வேலி முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் எவ்வாறு நடத்தப்படும் என்ற முக்கியக்கேள்வியைக் கேட்கவும் அவை மறந்து போயின.
அக்டோபர் 11 ஆம் தேதியன்று இலங்கைக்கு சென்ற தமிழக எம்.பி.க்கள் குழு தமிழகம் திரும்பியஐந்தாவது நாளில் முகாம்களில் அடைக்கப்பட்ட பாதிபேர் அவரவர் இடங்களில்குடியமர்த்தப்படுவார்கள் என்பதை தமிழக ஆளும் கட்சியின் கூட்டணியானது தனது வெற்றியாகசித்தரித்ததுஇருப்பினும்விடுவிக்கப்பட்ட மக்கள் அவர்தம் இடங்களுக்குச் செல்லும்போதுஎப்பேற்பட்ட அவலத்தை சந்திக்கவேண்டிவரும் என்பது குறித்து அது பேச  மறந்து போனது.
சிங்கள ராணுவத்தால் கைகாட்டப்பட்ட இடத்தில் மட்டுமே – தத்தம் குடும்பத்து இளைஞர்களையும்,அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்த – தமிழ்த் தாய்மார்ர்களும்வயோதிகர்களும்சிறார்களும்குடியேறவேண்டிய உச்சபட்ச அவல நிலை… இப்படிப்பட்ட ஒரு அவல நிலையை விடுதலை என்றுகூறும் தமிழக சட்டமன்ற அரசியல்வாதிகளின் சிந்தனையை என்னென்று கூறுவது? [முகாம்களில்இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர்களின் தற்போதைய கொடூரமான சூழ்நிலையை.நா.சபையின் மனித உரிமை செயலகத்தின் செய்திப் பிரிவு வெளியிட்ட செய்தி ஒன்று மிகத்தெளிவாகத் தெரிவிக்கிறதுhttp://transcurrents.com/tc/2009/12/report_from_jaffna_long_road_t.html#more
ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலைக்  குற்றம்
உலக சமூகத்தின் போர் நியதிகளை சிங்கள அரசு மீறத் துணிந்ததால் கடந்த இரண்டுஆண்டுகளுக்குள் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்சர்வதேச நாடுகளைச்சேர்ந்த பல்வேறு அரசுகளும்மனித உரிமை அமைப்புகளும்.நா.சபையும் இலங்கை அரசின் இந்தநடவடிக்கையையே ஈழத் தமிழ் மக்களின் மீது அது இழைத்த போர்க்குறற்றமாக அறிவித்துவருகின்றன.
ஈழத் தமிழ் மக்களின் நிலத்தை ராணுவமயமாக்கிஅவர்களது பல்லாயிரமாண்டுப் பாரம்பரியநிலத்தையும்பிற வாழ்வாதாரங்களையும் அபகரித்துஅவர்களின் இளைஞர்களை சிறையில்அடைத்து சித்திரவதை செய்து கொன்றொழிப்பதை .நா.சபையும்மனித உரிமை இயக்கங்களும்இன்று கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியுள்ளன.
ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டு வெளியேறிய காலம் தொட்டே சமத்துவம் என்பதை இலங்கைஅரசு கடைப்பிடிக்கத் தவறியது யார் குற்றம்சமத்துவம் கேட்டுப் போராடிய மக்களைக் காலம்காலமாக அடித்துத் துன்புறுத்த மட்டுமே பழகிப் போன ஒரு கூட்டத்துடன் எவ்வாறு வாழ முடியும்?சமத்துவம் கேட்டது தமிழர்களின் தவறா?
இல்லை என்கின்றன மேற்குலக நாடுகளின் அரசுகள்ஆனால் அவற்றால் சிங்கள அரசுடன்இணைந்து செயல்படும் இந்திய அரசினை மீறி செயல்பட இயலவில்லை என்பதுதான் உண்மைநிலை.
தமிழக சட்டமன்றம் இலங்கை அரசைத் தமிழினப் படுகொலை அரசாக’ அறிவிப்பதற்குத் தயங்க வேண்டிய அவசியம் இல்லை உலகின் பல நாடுகளின்  மாநில அரசுகள் இதுபோன்ற தீர்மானங்களை  பல்வேறு  இனப்படுகொலைகளையொட்டி  எடுத்துள்ளன.  வேற்று நாடுகளின் அரசோ அல்லது இந்தியாவில்  உள்ள வேறொரு  மாநில அரசோ இந்தத் தீர்மானத்தை எடுக்கும்முன்பு  தமிழக சட்ட மன்றம் இந்தத் தீர்மானத்தை  எடுப்பது  நல்லது

ஒரு தேசியமொழிஇனமதம் அல்லது குழுவினரை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோஅழிக்கும் உறுதியுடன் மேற்கொள்ளப்படும் கீழ்கண்ட நடவடிக்கைகளை இன அழித்தல் என்று.நா.வின் இன அழிப்பு குற்றம் மற்றும் தண்டனைக்கான பன்னாட்டுப் பிரகடனம் கூறுகிறது:
  1. அக்குழுவினரின் உறுப்பினர்களைக் கொல்வது
2. அக்குழுவினரின் உறுப்பினர்களுகு உடல் அல்லது மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது
3. அவர்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உடல் ரீதியாக திட்டமிட்டு அழிக்கும்வகையில் அவர்களின் வாழ்வை சிதைப்பது
4. அந்த இனக் குழுவில் பிறப்பைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது
5. அந்த இனக் குழுவினரிடமிருந்து அவர்களின் பிள்ளைகளைப் பிரிப்பது
என்று .நா.வின் இன அழித்தல் பிரகடனம் கூறும் மேற்கண்ட அனைத்தையும் இன்றுவரை சிங்களஅரசு செய்து வருகிறது.
இலங்கையில் நடந்து வருவது இனப் படுகொலையே என்பதை அறிவிக்கும் முயற்சியில் பல்வேறுமனித உரிமை அமைப்புகளும்பத்திரிகைகளும்நாட்டரசுகளும்நிறுவனங்களும் இறங்கியுள்ளன.இந்த முயற்சிகள் யாவும் கைகூடுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்ஏனெனில்பலபத்தாண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்மேனியயூத இனப்படுகொலைகளைக் கூட இன்றளவும்பல்வேறு நிறுவனங்களும்அரசுகளும் மெதுவாகவே ஏற்றுக்கொண்டு வருகின்றன என்பதுதான்உண்மை நிலை.
இது இனப்படுகொலைதான் என்பதை எந்த ஒரு நிறுவனமாவதோ அல்லது அரசோ முதலில்அதிகாரப்பூர்வமாக அறிவித்தாக வேண்டும்இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்புஇதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதுஅந்த அமைப்பத் தவிரஇங்கிலாந்து நாட்டின் டைம்ஸ்ஆன்லைன் பத்திரிகை இந்த அறிவிப்பை மே 29 ஆம் தேதியன்று முன்வைத்துள்ளதுஅதன் பின்னரேஇந்த அறிவிப்பைப் பரிசீலிக்கும்  செயல்பாடுகளைப் பல்வேறு நாட்டரசுகள் தொடங்கியுள்ளன.
1915 – 1916 ஆண்டுகளில் ஆர்மேனியர்கள் ஓட்டோமன் பேரரசால் இனப்படுகொலைக்குஉள்ளாக்கப்பட்டதை சுமார் 19 நாட்டரசுகள் இனப்படுகொலைதான் என்று தீர்மானம்நிறைவேற்றியுள்ளனஅமெரிக்காவின் 50 மாநிலங்களில் 42 மாநிலங்கள் இதற்கான தீர்மானத்தைநிறைவேற்றியுள்ளனகனடா நாட்டின் அரசானது  இதற்கான தீர்மானத்தை நிறவேற்றவில்லைஎன்றாலும் கூட அந்த நாட்டின் ஒண்டாரியோ மற்றும் க்யுபெக் மாநில அரசுகள் இந்தத் தீர்மானத்தை2002 ஆம் ஆண்டில் இயற்றினஇந்தத் தீர்மானத்தைப் பின்பற்றி 2004 ஆம் ஆண்டில் கனடா அரசேஇதற்கான தீர்மானத்தை இயற்றியதுஇது போன்ற நடவடிக்கையையே ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணம் 2007 ஆம் ஆண்டிலும்தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம் 2009 மார்ச்சிலும்தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இதுபோன்ற நடவடிக்கைகளையே யூதர்களின் இனப்படுகொலை தொடர்பிலும் நாம் காண்கிறோம்.ஜெர்மனி நாட்டின் நாஜி அரசால் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற கருத்தைபல்வேறு நாட்டரசுகள் சட்டமாக இயற்றியுள்ளனஆஸ்திரியாபோஸ்னியாபிரான்சுஜெர்மனிபோன்ற நாடுகளில் யூதர்கள் நாஜிக்களால் இனப்  படுகொலை செய்யப்படவில்லை என்று கூறுவதுசட்டப்படி குற்றமாகும்.
———————–
தமிழக சட்டமன்றம் இலங்கை அரசை இனப்படுகொலைக்கான அரசாக அறிவித்தால் இலங்கை அரசுஈழத் தமிழர்களை மேலதிகமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி விட்டால் என்ன செய்வதுஎனவேதான்அந்த அரசோடு நீக்குப் போக்காக இருக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கத்தான் செய்கிறது.இருப்பினும் இது ஒரு பத்தாம்பசலிக் கருத்தேயொழிய வேறில்லை.
சிங்கள அரசின் செயல்பாடுகளின் மீது சர்வதேச அரசுகள் மற்றும் நிறுவனங்களின் கண்காணிப்புப்பார்வை குவியத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழ்நிலையில் தமிழக சட்டமன்றத்தின்நடவடிக்கையால் ஈழத் தமிழர்கள் மேலதிகமான சித்திரவதைக்கு உள்ளாக வேண்டிவரும் என்பதுநகைப்புக்கு உரிய கருத்தாகவே இருக்கும்.
மாறாகதமிழக சட்டமன்றத்தால் இயற்றப்படும் அப்படிப்பட்டதொரு தீர்மானம் சிங்கள இன வெறிஅரசுக்கு எதிரான நாட்டளவிலும்சர்வதேச அளவிலும் நடத்தப்படும் ஒரு வெற்றிகரமானபரப்புரையாகவே இருக்கும்ஈழத் தமிழர்களைக் காக்கும் கவசமாக அது அமையும்.
மத்திய அரசின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பல்ல.
இந்தியை எதிர்க்கத் துணிந்த மாநிலமே தமிழகம்
இன்றைக்கு சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1968 ஜனவரி 23 ஆம் நாளன்று – நடந்தநான்காவது தமிழக சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வைஇன்றளவும் தமிழ் இனம் மறக்க முடியுமாஇந்தியைத் தமிழ்நாடு ஏற்காது என்ற  தீரம் மிக்கதீர்மானத்தை இயற்றிய நாளல்லவா அதுஇந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்ட ராஜாஜியின்1937 ஆகஸ்டு 11 ஆம் தேதி அரசாணைக்கு 30 ஆண்டு காலப் போருக்குப் பின் திட்டவட்டமாக முடிவுகட்டிய நாளல்லவா அதுஸ்டாலின் ஜெகதீசன்பொன்னுசாமிகுமாரசாமிமூவலூர் ராமாமிர்தம்அம்மாள்நடராஜன்தாளமுத்து போன்ற மொழிப்போர் வீரர்களால் ஊட்டப்பட்ட நெஞ்சுரமானது  “இந்தியை அறியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுக என்ற துலேகரின் வார்த்தைகளைக்கொன்றொழித்த நாளல்லவா அதுசியாம பிரசாத் முகர்ஜிலால் பகதூர் சாஸ்திரிமொரார்ஜிதேசாய்குல்சாரி லால் நந்தா ஆகியோரையெல்லாம் தமிழக சட்ட மன்றம் வெற்றிகண்ட நாளல்லவாஅது? 30 ஆண்டுகளாகத் தமிழ் இனம் பட்ட ஏளனத்தை இல்லாதாக்கிய நாளல்லவா அது?
1968 ஜனவரி சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு இணையான கூட்டத்தொடர் இன்னும் சிலதினங்களில் மலரவுள்ளது. 2010 ஜனவரி ஆம் நாள் மலரவுள்ள அந்தக் கூட்டத் தொடரில் கடந்த 50ஆண்டுகளாக இலங்கையில் சிங்கள இனவாதிகளாலும்அவர்தம் அரசாலும்அவர்களுக்குக்குத்துணை நின்ற இந்திய அரசாலும் ஏளனப்படுத்தப்பட்டும்கொடுந்துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டும்வந்த ஈழ மக்களின் விடியலுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.
முத்துக்குமார்ஜெனீவா முருகதாசன்சீர்காழி ரவிச்சந்திரன்சென்னை அமரேசன்மலேசியா ராஜா,பள்ளபட்டி ரவிகடலூர் தமிழ்வேந்தன்சென்னை சிவப்பிரகாசம்ஜெயங்கொண்டம் ராஜசேகர்,சென்னை சதாசிவம் ஸ்ரீதர்புதுக்கோட்டை பாலசுந்தரம்விருதுநகர் கோகுலகிருஷ்ணன்,வாணியம்பாடி சீனிவாசன்கடலூர் நாகலிங்கம் ஆனந்த் ஆகியோரின் ஈகைக்கு நாம் செய்யக்கூடியஒரே கைமாறு இதுதான்.
 
அந்த வீரர்களின் நினைவினை தமிழக சட்டமன்றமானது தன் மனதில் ஏந்திஇலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிவரும் அரசு என்ற  தீர்மானத்தினை இந்தஉலகமயமாதல் யுகத்தில் இயற்றிட வேண்டும்.
இந்த செயல்பாடே ஈழத் தமிழர்களுக்கும்உலகத் தமிழ் இனம் முழுமைக்குமேயான விடியலாகஅமையும். .

Leave a Reply