சீர்காழியில் நடைபெற்ற தோழர் கனிமொழி அவர்களுக்கான படத்திறப்பு விழா

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சீர்காழி மாவட்ட தலைவர் அருமை தோழர் சீர்காழி பெரியார் செல்வம் அவர்களுடைய துணைவியார் தோழர் கனிமொழி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்தார் தோழர் கனிமொழி அவர்களுக்கான படத்திறப்பு விழா நேற்று சீர்காழியில் பல்வேறு கட்சி மற்றும் இயக்கத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு தோழர் கனிமொழி அவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு அவர்களுடனான நினைவையும் பகிர்ந்துகொண்டார்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply