ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் என்கிற தமிழரின் தொன்மை புதைத்து இருக்கிற நகரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தும் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுக!

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் என்கிற தமிழரின் தொன்மை புதைத்து இருக்கிற நகரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தும் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுக! மே17 இயக்கம்

கடற்கரையோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்கிற தமிழர்களின் தொன்மையான நாகரீகம் புதைந்துள்ள இடத்தில் இந்திய அரசின் எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகள் அமைக்கும் பணிகளை திடீரென்று ஆரம்பித்திருக்கிறது.

ஏற்கனவே காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய் குழாய் அமைக்கிறோம் என்கிற பெயரில் விவசாயத்தை காலிசெய்து தரிசு நிலம் ஆகிய இதே நிறுவனம் இன்று கடலோர மாவட்டங்களில் தனது வேலையை ஆரம்பித்திருக்கிறது.

இந்த திட்டம் மட்டும் நிறைவேறினால் கடலை மட்டுமே நம்பி வாழ்கிற மீனவர்கள் இதனால் மிகப்பெரிய பாதிப்பை அடையக்கூடும். இந்த திட்டத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித விழிப்புணர்வும் இல்லாத பொழுது மக்களிடமிருந்து இடங்களை ‘வளர்ச்சி’ என்ற பெயரில் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அப்போதே பொது மக்கள் மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இதனால் இந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டு இருக்கிறது. இப்போது கொரொனா நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு மறுபடியும் மக்களின் கருத்தை கேட்காமல் மீண்டும் வேகமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது ஒ.என்.ஜீ.சி நிறுவனம்.

காவிரி டெல்டாவில் ஏற்பட்ட அழிவை பார்த்த ஒட்டுமொத்த தமிழகமும் இந்த எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவு திட்டங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கும் போது பத்து ஆண்டுகளுக்கு முன் உள்ள அனுமதியை வைத்துக்கொண்டு இப்போது கிணறு தோண்டுவது தமிழக மக்களை அவமானப்படுத்துவதாகும்.

ஆகவே மீனவர்களின் வாழ்வாதாரம் கருதியும், தமிழர்களின் தொன்மையை அழிக்காமல் இருக்கவும் அழகன்குளம் பகுதியில் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும், இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மே 17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply