பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

தமிழர்களை வஞ்சித்த இந்திய மோடி அரசு!

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் குறிப்பிட்ட மருத்துவ இடங்களை மத்திய தொகுப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் மத்திய அரசின் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆனால் மோடி அரசு கடந்த மூன்றாண்டுகளில் இந்த நடைமுறையை செயல்படுத்தாமல் விட்டுவிட்டது. இதனால் இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய சுமார் 11027 மருத்துவ இடங்களும், தமிழகத்தில் சுமார் 1167 மருத்துவ இடங்களும் கிடைக்காமல் போயிருக்கிறது.

இதைவிடக் கொடுமை பிற்படுத்தப்பட்டோருக்கான அந்த இடங்களை உயர்சாதி பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்திருக்கிறது மோடி அரசு. ஏற்கனவே 3%க்கும் குறைவாக இருக்கும் பார்ப்பனர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை வாரிவழங்கிய மோடி. தற்போது பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ இடங்களையும் பறித்து பார்ப்பனர்களுக்கு கொடுத்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களே பாஜகாவின் இந்த சமூக அநீதியை எதிர்க்க தமிழர்களாய் ஒன்று திரள்வோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply