தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்!

தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்!

ஒன்றரை லட்சம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டதை 11 ஆண்டுகளில் மறந்துவிட முடியுமா?

ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்த நினைவேந்தலை இந்த முறை கொரோனா தொற்றின் காரணமாக வீடுகளிலிருந்து அனுசரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பேரரசுகளோ, பெருந்தொற்றுகளோ நம் உள்ளத்தில் எழும் குமுறலையும், நம் கண்ணீரையும், நம் உறுதியையும் எப்படி தடுத்துவிட முடியும்?

மே 17-ம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மற்றும் பொதுவாக்கெடுப்பு கோரி உங்கள் வீடுகளின் முன்பு பதாகை ஏந்தி நின்று முழக்கமிடுங்கள்! அந்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுங்கள்!

மாலை 6:30 மணிக்கு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்தி இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு உங்கள் குடும்பத்துடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து நினைவேந்துங்கள்.

இனப்படுகொலையை மறக்க மாட்டோம் என்ற முழக்கங்கள் சமூக வலைதளங்களின் மூலமாக உலகெங்கும் உள்ள மனித சமூகத்தின் காதுகளை எட்டட்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply