DYFI அமைப்பின் நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதி வெறி கும்பலை உடனே கைது செய்!  மிகக் கடுமையான தண்டனை வழங்கு!

DYFI அமைப்பின் நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதி வெறி கும்பலை உடனே கைது செய்!  மிகக் கடுமையான தண்டனை வழங்கு! – மே பதினேழு இயக்கம்

நெல்லை மாவட்டம் கரையிருப்பு கிராமத்தில் வசித்து வந்தவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர் அசோக். தொடர்ச்சியாக உழைக்கும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தவர்.

தன் சொந்த கிராமத்தில் சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பி வந்த DYFI தோழர் அசோக் மற்றும் அவரது தாயாரை சில தினங்களுக்கு முன்பு சாதி வெறி கும்பல் வழிமறித்து தாக்கியும் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தோழர் அசோக் அவர்களை சாதி வெறி கும்பல் நேற்று படுகொலை செய்திருக்கிறது.

சாதி வெறிக் கொலைகார கும்பல் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். சாதி வெறிக்கு எதிராக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.

தோழர் அசோக் இந்த சமூகத்திற்காக உழைத்தவர். அவருக்கான நீதிக்கு நாம் குரலெழுப்ப வேண்டும். சாதி ஒழிப்புக் களத்தினில் நாம் கை கோர்த்து நிற்க வேண்டும்.

சாதி வெறி மிருகங்களால் படுகொலை செய்யப்பட்ட போராளி தோழர் அசோக்கிற்கு செவ்வணக்கத்தினை மே பதினேழு இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply