கடலூர் மாணவி கொலை, குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்

- in சாதி

கடலூர் மாணவி கொலை, குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்- மே பதினேழு இயக்கம்

நேற்று முந்தினம் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி அவரது வீட்டில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இந்த கொடூரச்செயலில் ஈடுபட்ட நபரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதுபோன்ற கொடூரங்கள் இனி எங்கும் ஏற்படாதவாறு, பெண்கள் குறித்தான புரிதல்களை உருவாக்கும் வண்ணம் அரசு நடவடிக்கைகளை பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டுமென்றும் மே பதினேழு இயக்கம் அரசை வலியுறுத்துகிறது.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply