கரூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்

கரூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்.

அரசியல், பொருளாதாரம், வரலாறு, தமிழரின் தொல்சமய தத்துவ நூல்கள் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு புத்தகங்களை நிமிர் அரங்கில் வைத்திருக்கிறோம்.

மே பதினேழு இயக்கக் குரல் மாத இதழ் நிமிர் அரங்கில் கிடைக்கும்.

மேலும் நிமிர் பதிப்பக வெளியீடுகளான கெளரி லங்கேஷ் கட்டுரைகள்(மதமும் அரசியலும்), உணவென்றும் நஞ்சென்றும் ஒன்று(சூழலியல் நூல்), தமிழீழ விடுதலை நம் முன்னே உள்ள கடமைகள், தொ.பரமசிவன் அவர்களின் நான் இந்துவல்ல நீங்கள்?, முத்துக்குமார்-முருகதாசன் கடிதங்களான அறிவாயுதம் ஏந்துவோம், மூடப்படும் ரேசன் கடைகள், எனது நாட்டில் ஒரு துளி நேரம்(விடுதலைப் புலிகளின் ஆட்சிமுறை), விடிவிற்காய்(பெண்புலிகளின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் தொகுப்பு), அழிவின் அறிவியல்(மீத்தேன் திட்டத்தின் ஆபத்துகள் குறித்தான முழுமையான விளக்க புத்தகம்), தமிழ்நாட்டில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும்(தனியாருக்கு தாரைவார்க்கப்படும் மின்வாரியக் கொள்கைகள் குறித்தான விரிவான விளக்க நூல்) போன்றவையும் கிடைக்கும்.

தோழர்கள் அனைவரும் அவசியம் வரவும். அரங்கு எண் :53, பிரேம் மகால், கோவை ரோடு, கரூர்.

ஜூலை 13-22 வரை.

Leave a Reply