பாசிச பாஜக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைவோம்

இன்று (6-6-2018) தமிழ்நாட்டின் எல்லா இதழ்களிலும் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக போராடுகிற அமைப்புகளின் தலைவர்களை UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் போன்ற கருப்பு சட்டங்களில் கைது செய்வதற்கான திட்டங்களை மத்திய உளவுத்துறை வகுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தூத்துக்குடி படுகொலைக்கு பிறகு ஒரு காட்டாட்சி தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

தடுப்புக் காவல் சட்டங்கள் அனைத்தும் ஜனநாயக விரோதமானவை, அவை நீக்கப்படவேண்டும் என்று உலகம் முழுதும் விவாதங்கள் வலுத்து வரும் நிலையில், பாசிச பாஜக அரசு மக்கள் போராட்டங்களுக்கு எதிரான ஆயுதமாக தடுப்புக் காவல் சட்டங்களை பயன்படுத்தி வருகிறது.

இந்திய அரசும், தமிழக அரசும் அரசியலமைப்பு சாசனத்தின் எல்லா அடிப்படைகளையும் மீறி ஜனநாயக விரோதமாகவே செயல்பட்டுவருகின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு முன்பாகவே, அனைத்து மக்கள் இயக்கங்களையும் ஒடுக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் பாசிச பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் உச்சமாக போராடும் இயக்கங்களை எல்லாம் தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும், சமூக விரோதிகள் என்றும் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள்.

ஏற்கனவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதன் பிறகு சமூக இயக்கங்களை சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு சென்று காவல்துறை மிரட்டி வருகிறது.
இந்த பாசிச அரசின் அடக்குமுறையினை எதிர்கொள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கிற அனைவரும் பாசிசத்திற்கு எதிராக ஒற்றைப் புள்ளியில் இணைந்து நிற்போம்.

பார்ப்பனிய பாஜக அரசின் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட இணைவோம்.
ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம். பாசிசத்தினை எதிர்கொள்வோம். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நெருக்கடி நிலையினை உடைத்தெறிவோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply