செம்மரக் கடத்தல் முதலாளிகளின் கொள்ளைப் போட்டிக்காக, 20 அப்பாவி தமிழ் தொழிலாளர்களை படுகொலை செய்த சந்திரபாபு நாயுடுவிற்கு சொந்தமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம், சென்னை திநகரில் இன்று முற்றுகையிடப்பட்டது.
முற்றுகையிட வருவதை அறிந்த நிறுவனத்தினர், கடையை பூட்டி விட்டு ஓடினர். தமிழர்கள் அனைவரும் இந்த ஹெரிடேஜ் நிறுவனத்தை புறக்கணிகஃக வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தினை மே17 இயக்கம் ஒருங்கிணைத்தது. இதில் தமிழர் விடுதலைக் கழகத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.