நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப கோரி நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும், தமிழர் உணர்வுகளுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டியும், திராவிடத் தமிழர் கட்சி சார்பாக 28-02-2022 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகையில், தோழர் விடுதலை ராஜேந்திரன், அப்துல் சமது உள்ளிட்டவரோடு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் கலந்துகொண்டார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply