தந்தை பெரியார் அவர்களின் 48வது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

தந்தை பெரியார் அவர்களின் 48வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (24-12-2021) வெள்ளிக்கிழமை காலை, சென்னை தியாகராய நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பறையிசையுடன் அணிவகுத்து சென்ற தோழர்கள், பெரியாரின் சமூகநீதி கருத்துக்களை முழக்கமாக இட்டுச் சென்றனர். இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், தமிழப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பேரறிவாளன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply