வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற குடும்பங்களுக்கு மே17 இயக்கம் நிவாரண உதவி

தொடர்ச்சியாக வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற குடும்பங்களுக்கு மே17 இயக்கம் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.

அதன்படி வேலூர் அலமேல் ரங்கா புறத்தில் தினக்கூலி வேலைக்கு செல்வோர் மிகவும் வறுமையான கட்டத்தில் உள்ளதாக கேள்விப்பட்டோம் ஆகவே அங்கிருக்கிற 32 குடும்பத்துக்கும் அரிசி மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

மேலும் வேலூருக்கு வடநாட்டிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வந்த ஒரு குடும்பத்தார்க்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

காட்பாடி அருகில் இருக்கும் நரிக்குறவர் களுக்கு 10 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அரிசி கொடுக்கப்பட்டது.

இன்று மட்டும் 52 குடும்பங்களுக்கு உதவி செய்யப்பட்டது

Leave a Reply