தமிழக அரசே! தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 10 தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை உடனே திரும்பப் பெறு

தமிழக அரசே! தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 10 தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை உடனே திரும்பப் பெறு -மே17இயக்கம்

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவிலும் சரி, அதற்கு முன்னரும் சரி தொடர்ந்து தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசிவரும் குருமூர்த்தியின் செயலுக்கான எதிர்வினை புரிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் தமிழக அரசால் போடப்பட்டு இருக்கிறது.

ஆனால் தொடர்ச்சியாக வன்முறையை தூண்டும் விதமாக பேசிவரும் பிஜேபி தலைவர்கள் மீதோ அல்லது தற்போதைய ஆளும் அதிமுக அரசை ‘ஆண்மையில்லாதவர்கள்’ என்று பேசியவர்கள் மீதோ இதுவரை ஒரு சிறு வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் இருக்கிறது தமிழக அரசு. ஆனால் அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்க வேண்டுமென்றால் மட்டும் அரசு இந்திரம் மிகவேகமாக வேலைசெய்கிறது.

அந்தவகையில் தான் தற்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டிருக்கிறது. இந்த கொடுஞ்செயல் என்பது அரசின் கொள்கையை விமர்சிப்பவர்களுக்கும், தமிழர்களை இழிவு படுத்துவதை கண்டிப்பவர்களுக்கும் இது தான் கதி என்று மறைமுகமாக அச்சுறுத்தும் செயலாகவே தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பார்க்க முடிகிறது.

ஆகவே இத்தகைய அச்சுறுத்தும் நடவடிக்கையை கைவிட்டுவிட்டு தமிழக அரசு உடனடியாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 10 தோழர்களின் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply