குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க டெல்லி காவல்துறை மிக மூர்க்கமாக கொலைவெறி தாக்குதல்

குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை மிக மூர்க்கமாக கல்லூரிகள் நாலாபக்கமும் சென்று மாணவர்களை கழிவறை நூலகம் என்று பார்க்காமல் அனைத்து இடங்களிலும் அடித்து துவைத்து கொண்டிருக்கிறது.

அங்கிருந்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பதைபதைப்பை உண்டாக்குகிறது. காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல் இரு மாணவர்கள் இறந்திருக்கலாம் என்ற செய்தி வருகிறது அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த நடவடிக்கை தேன்கூட்டில் கை வைத்ததை போல என்பதை ஆளும் பாசிச பிஜேபி அரசு உணர வேண்டும்.

டெல்லியில் இருக்கும் ஜனநாயக சக்திகள் உடனடியாக இந்தப் பாசிச நடவடிக்கையை தடுக்க அங்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

பாசிசம் வென்றதாக ஒரு நாளும் வரலாறு கிடையாது நாம் வெல்வோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply