மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களை சிறையிலடைத்ததை கண்டித்து நடைபெற்றது மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததிற்கு நீதி கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி, பொய்வழக்குகள் பதிந்து சிறையிலிட்டதை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று 09/12/2019 மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சுவர் கட்டிய சிவசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவனை தாக்கிய காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவன் மீது போடப்பட்ட அணைத்து பொய் வழக்குகளும் திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த எண்ணற்ற தோழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

Leave a Reply