கீழடியில் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள்

தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வைகை நாகரீகத்தின் கீழடி தொல்லியியல் அகழாய்வு இடத்தை 07-10-19 திங்கள் அன்று, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மே 17 இயக்கத் தோழர்களும் பார்வையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்த போது, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களும், தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிவாளன் அவர்களும் உடனிருந்தனர். கீழடி அகழாய்வு இடத்திலிருந்த தொல்லியல் துறையின் அதிகாரிகள், அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்து தோழர்களுக்கு குறிப்புகள் கொடுத்து விளக்கமளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி, கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

1] தமிழரின் தொல்வரலாறு கண்டெடுக்கப்பட்ட இந்த கீழடி பகுதியை நிலத்தின் சொந்தக்காரர்களிடம் சரியான தொகையை கொடுத்து தமிழக அரசு வாங்கவேண்டும்.இந்த பகுதியை திருப்பி மூடாமல் அப்படியே –தோண்டப்பட்ட பகுதியை ‘சைட் மியூசியமாக’ site museum தள அருங்காட்சியமாக மாற்றவேண்டும்.பள்ளிக்குழந்தைகள் ,கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் என எல்லோரும் எப்போதும் பார்வையிடும் இடமாக மாற்றவேண்டும் மற்றும் வெளிநாடு வெளிமாநிலத்திலிருந்து வருகை தரும் பார்வையாளர்களுக்கும் தமிழர்களின் தொல்வரலாறை காண அனுமதியளிக்கவேண்டும்

2]இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மதுரையிலே வைப்பதற்கும் அதை பாதுகாப்பதற்கும் அரும்காட்சியகம் அமைத்தல் வேண்டும்.இந்த அரும்காட்சியகம் தமிழக அரசு தனது சொந்த செலவில் அமைத்தல் வேண்டும். இதற்கு தமிழக அமைச்சர் மத்திய அரசிடம் நிதி கேட்டிருப்பதாக கேள்வி படுகிறோம் அதை தவிர்க்க வேண்டும்.தமிழர்களின் அடையாளங்களை பாதுகாக்க தமிழக அரசு செலவு செய்யாதா? இல்லை தமிழ் மக்களிடம் நிதி திரட்டுங்கள் தர தயாராக இருப்பார்கள். மத்திய அரசிடம் இதற்கு நிதி பெற்று இதை மத்திய அரசிடம் தாரை வார்க்காதீர்கள் பிறகு சுதந்திரமான தமிழர்களின் ஆராய்ச்சிக்கு தடையாக இருக்கும்

3] முதல் மூன்று கட்ட ஆய்வில் கீழடியில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்கள் பெங்களூர் ASI அலுவலகத்தில் இருப்பதாக அறிகிறோம் முதல் மூன்று கட்ட ஆய்வில் என்ன, என்ன பொருட்கள் எடுத்தீர்கள் என இன்னும் ஏன் பட்டியலை வெளியிடவில்லை?அதன் கால கணிப்பிற்கு எத்தனை பொருட்களை அனுப்பி இருக்கிறீர்கள், மீதி பொருட்கள் எந்த நிலையில் இருக்கிறது ?அதை பற்றிய எந்த தகவலும் உங்க வெப் சைட்டில் ஏற்றாமல் இருக்கிறீர்கள் ஏன்? டிஜிட்டல் இந்தியா என்கிறீர்கள் தமிழர்களின் அடையாளத்தை மட்டும் ஏன் டிஜிட்டலில் ஏற்றாமல் இருக்கிறீர்கள்? மூன்றாம் கட்ட ஆய்வில் கண்டெடுத்த பொருட்களை படத்துடன் உங்கள் வெப்சைட்டில் ஏற்றினால் மற்ற துறை சார்ந்த ஆய்விற்கும் அது பயன்படுமல்லவா! ஆகையால், கண்டெடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான பொருட்கள் படத்துடன் உங்கள் வெப்சைட்டில் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம். ஒன்று முதல் மூன்று கட்ட ஆய்வில் வேலை செய்த ஆய்வாளர்கள் நாளை இடம் மாறுதல் ஏற்பட்டு வேறு இடம் சென்று விட்டால் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் நிலை என்ன? உடனடியாக வரைபடம் மற்றும் பொருட்களின் தன்மை ,பொருட்களின் எண்ணிக்கை இவைகளை அவர்களிடமிருந்து பட்டியல் இடச்சொல்லி கேட்டு அதை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டுகிறோம்

4] தமிழகத்தின் மற்ற பகுதியில் குறிப்பாக ஆதிச்ச நல்லூர் ,கொற்கை ,கொடுமணல் ,பொருந்தல்,மாங்குளம் மற்றும் இன்னபிற இடங்களில் நடந்த ஆய்வை மீண்டும் தொடர வேண்டும்.கீழடி ஆய்வை நிறுத்தி விடாமல் வைகை ஆற்றின் கரை ஓரம் நீங்கள் தேர்வு செய்திருந்த இடத்தில் எல்லாம் ஆய்வை தொடர வேண்டும். மற்ற இடத்தில் ஆய்வு செய்த ஓய்வு பெற்ற அறிஞர்களை மீண்டும் பயன்படுத்தி தமிழர்களின் தொல் வரலாற்றை உலகம் அறிய செய்யவேண்டும்

5] இதுவரை கீழடியில் மத்திய ,மாநில இரு அரசுகளின் ஆய்வில் கிடைத்த ஒட்டுமொத்த பொருட்களையும் பட்டியல்யிட்டு பொது வெளியில் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்

Leave a Reply