சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கேரள அரசின் பேருந்து மறியல்

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் கேரள அரசின் பேருந்து மறியல் 10-9-19 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.

சிறுவாணி அணையின் நீர்மட்ட உயரத்தினை 50 அடிக்கு தேக்காமல் 42 அடியிலேயே கேரள அரசு வெளியேற்றி வருகிறது. இதனால் அணை நிரம்பாமல் கேரள அரசு தடுத்து வருகிறது. இதன் காரணமாக கோவையில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

இயற்கையாக மழை பெய்து தண்ணீர் வந்தாலும் கேரள அரசு அதை கோவை மக்களுக்கு கிடைக்கச் செய்யாமல் வீணாக்குகிறது. சிறுவாணி அணை பராமரிப்புக்கென ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பணத்தை கோவை மாநகராட்சி செலவிடுகிறது. ஆனால் கேரள அரசு திட்டமிட்டு தமிழர்களை வஞ்சிக்கிறது. கேரள அரசு சிறுவாணி அணையில் 50 அடிக்கு தண்ணீரை தேக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவைக்கு வரும் கேரள அரசின் பேருந்துகளை மறித்து இம்மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

Leave a Reply