SC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்

- in சாதி, சென்னை

SC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை இன்று 17-7-19 சென்னையில் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்றார்.

SC/ST துணைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பல்வேறு துறைகளின் கீழ் முறையாக பயனாளிகளை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனைக் களைய ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் SC/STக்கான துணைத்திட்டத்தினை சட்டமாக்கியது போல், தமிழக சட்ட சபையிலும் SC/STக்கான துணைத்திட்டத்தை சட்டமாக்க வலியுறுத்தியும்,

துணைத்திட்ட நிதியை ஆதிதிராவிட நலத்துறையிடம் நேரடியாக ஒப்படைத்து திட்டத்தை அமல்படுத்தக் கோரியும்,

SC/ST துணைத்திட்ட நிதியை பொதுத் திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பேத்கர் மக்கள் படை அமைப்பின் நிறுவனர் தலைவர் டாக்டர் மு.மதிபறையனார் தலைமை வகித்தார். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் முன்னிலை வகித்தார்.

Leave a Reply