தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு

- in பரப்புரை

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வேலூர் சிறையில் முறையற்ற உணவின் காரணமாக ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக, அடுக்கம்பாறை மருத்துவமனையில் IMCU வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள், அனைத்து வழக்குகளுக்கும் பிணை பெறப்பட்ட பின்பு நேற்று முந்தினம் அக்டோபர் 2 அன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார்.

தற்போது சென்னை அஸ்வினி செளந்திரா மருத்துவமனையில் சிகிச்சையினை தொடர்ந்து வரும் அவரை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார்.

Leave a Reply