பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் சந்திப்பு

- in பரப்புரை

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் சந்திப்பு.

வேலூர் சிறையில் 50 நாட்களுக்கு மேலாக முறையற்ற உணவினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேலூர் மருத்துவமனையில் IMCU வார்டில் சிகிச்சை பெற்று வந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் விடுதலைக்குப் பின்னர் சென்னைக்கு வந்து அஸ்வினி சொளந்திரா மருத்துவமனையில், ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினைக்காக சிகிச்சையினை தொடர்ந்து வருகிறார்.
அவரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முகமது இஸ்மாயில் அவர்கள் நேற்று (4-10-18) மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a Reply