தோழர் திருமுருகன் காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவர் எழிலன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

- in பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி நேற்று (02-10-18) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் பெற்றுவந்த சிறைச்சாலை மருத்துவ சிகிச்சையை தொடரும்பொருட்டு, மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நள்ளிரவில் சென்னை அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தோழர் தோழர் திருமுருகன் காந்தியின் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் மருத்துவர் எழிலன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து விரிவாக விளக்கினார். தோழர் திருமுருகன் காந்தி கடந்த இரண்டு மாதங்களாக சரிவர உணவு எடுத்துக்கொள்ளாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள அசிடிட்டி, நீர்ச்சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், உடல்நிலை சீராகும் வரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர்களிடையே விரிவாக பேசினார்.

Leave a Reply