தோழர் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக மீண்டும் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

- in பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக இன்று மீண்டும் வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு, செரிமானக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் தோழரை அழைத்து வந்த காவல் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்றும், மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்புங்கள் என்று மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது மருத்துவமனையின் மருத்துவர், இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருக்கும் நோயாளி, அவரது உடல்நிலை இருக்கும் நிலைக்கு சிகிச்சை அளிக்காமல் தன்னால் அனுப்ப இயலாது என்று தெரிவித்துள்ளார். மருத்துவரின் தொடர்ச்சியான பரிந்துரை காரணமாக தற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையின் IMCU எனும் வார்டில் திருமுருகன் காந்தி அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருமுருகன் காந்தி அவர்களின் உடல்நிலையை சிதைப்பதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வேலை செய்கிறதோ என்கிற ஐயத்தினை காவல்துறையினரின் நடவடிக்கைகள் எங்களுக்கு ஏற்படுத்துவதாய் இருக்கின்றன.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply