மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை – தமிழ்நாட்டு கல்வி இயக்கத்தின் மாநாடு – மே 17 இயக்கம் பங்கேற்பு

- in பரப்புரை

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை என வலியுறுத்தி தமிழ்நாட்டு கல்வி இயக்கத்தின் 4 வது ஆண்டு மாநாடு சென்னை அடையாறில் எம்.ஜி.ஆர் ஜானகி கலைக் கல்லூரி எதிரில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் செப்டம்பர் 26,27, 28 ஆகிய மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர் பொழிலன் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இதில் இரண்டாம் நாளான நேற்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர் அருள்முருகன் மாநாட்டில் பங்கேற்று கல்வி உரிமை குறித்து உரையாற்றினார்.

மாநிலங்களின் கல்வி உரிமையினை இந்திய ஒன்றிய அரசு முற்றிலுமாக பறித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த முக்கியமான மாநாட்டினை நடத்தி வருகிற தமிழ்நாட்டு கல்வி இயக்கத்திற்கு மே பதினேழு இயக்கம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply