திருமுருகன் காந்தியை விடுதலை செய்க! – தோழர் முத்தரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

- in பரப்புரை

திருமுருகன் காந்தியை விடுதலை செய்க!
==========================
மே 17 இயக்கத் தலைவர் தோழர்.திருமுருகன் காந்தி மீது, ஏராளமான வழக்குகளை ஜோடித்து வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருமுருகன் காந்தி ஆயுதம் ஏந்தி வன்முறை செயலில் ஈடுபட்டவர் அல்ல. சட்டத்திற்கு புறம்பான முறையில் செயல்பட்டவரும் அல்ல.

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்துக்களை கூறிவந்தார். இயக்கங்களை நடத்தி வந்தார்.

திருமுருகன் காந்தி மீது பல்வேறு பிரிவுகளில் ஜாமினில் கூட வெளிவர முடியாத அளவிற்கு வழக்குகள் போடப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் உள்ள திருமுருகன் காந்தி மிகக் கடுமையான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.

அவரது உடல் நலன் கருதி உடனடியாக விடுதலை செய்திட வேண்டுமாய் தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

————————–————————–———

தோழர் முத்தரசன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply