ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் முன்பாக திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி ஈழத்தமிழர்கள் ஏந்தி வந்த பதாகைகள்

- in பரப்புரை

**ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் முன்பாக திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி ஈழத்தமிழர்கள் ஏந்தி வந்த பதாகைகள்**

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் முன்பாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நடைபெற்ற பேரணியில், திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஈழத்தமிழர்கள் ஏந்தி வந்தனர்.

தமிழர் உரிமைகளை ஐ.நாவில் பேசினால் குற்றமா? திருமுருகன் காந்திக்கு நீதி வேண்டும். 
ஐ.நா மனித உரிமை ஆணையமே! திருமுருகன் காந்தி கைதினை கண்டித்திடு!
இந்திய அரசே! தமிழ்நாடு அரசே! திருமுருகன் காந்தியை விடுதலை செய்!
ஈழத்தமிழர்கள் உரிமைக்காக திருமுருகன் காந்தி ஐ.நாவில் பேசினார். அவருக்காக நாங்கள் குரல் எழுப்புவோம்! என்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை அவர்கள் ஏந்திவந்தனர்.

இனப்படுகொலைக்கான நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், திருமுருகன் காந்தி விடுதலைக்காக குரல் கொடுத்துள்ள ஈழத்தமிழ் தோழர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply