உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏழு தமிழரை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் – மே 17 இயக்கம்

- in பரப்புரை

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த ஏழு நிரபராதித் தமிழரின் விடுதலை இனியும் தாமதிக்கப்படக் கூடாது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏழு தமிழரை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.

27 ஆண்டுகளாக சிறையில் இருந்து தங்கள் இளமைக் காலத்தினை இழந்துள்ள நிரபராதித் தமிழர்களின் விடுதலையை உடனடியாக எத்தகைய தாமதமும் செய்யாமல் உறுதி செய்திட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

-மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply