தாம்பரம் மற்றும் சைதாப்பேட்டை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி!

- in பரப்புரை

தாம்பரம் மற்றும் சைதாப்பேட்டை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி!

2017ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கூட்டத்தில் பேசியதற்கு திருமுருகன் காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து பல மேடைகளில் நாள்தோறும் பேசி வரும் திருமுருகன் காந்தி, 2017லிருந்து தலைமறைவாக இருந்ததாக ஒரு தரமற்ற பொய்யினை பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வழக்கிற்காக இன்று தாம்பரம் நீதிமன்றத்தில் தோழர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

அடுத்ததாக இலங்கைக்கு ஆதரவான அமெரிக்கத் தீர்மானத்தினை எதிர்த்து அமெரிக்கத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தியதற்கும், 2016 ஆம் ஆண்டு மோடியின் தமிழக வருகையின் போது ரேசன் கடையில் மூடும் வகையில் TFA ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டதைக் கண்டித்து சைதாப்பேட்டையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Leave a Reply