பாஜக மோடி அரசின் காட்டாட்சி தர்பார்!

- in பரப்புரை

பாஜக மோடி அரசின் காட்டாட்சி தர்பார்!

திருமுருகன் காந்தி மீது பிணையில் வெளிவரமுடியாத தீவிரவாதிகள் மீது போடப்படும் UAPA வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.

பொடா, தடா சட்டங்களைப் போன்ற மிகக் கொடூரமான, ஜனநாயக விரோத கருப்பு சட்டமான UAPAவினை மனித உரிமை செயல்பாட்டாளரான திருமுருகன் காந்தி மீது ஏவியிருக்கிறது மோடியின் அரசு.

ஐ.நாவில் பேசிவிட்டு வந்த மனித உரிமை செயல்பாட்டாளரை தீவிரவாதிகள் மீது போடும் சட்டத்தினை பயன்படுத்தி கைது செய்திருப்பதன் பாஜக மோடியின் அரசு எத்தனை கொடூரமானது என்பதை நிரூபித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் செயல்பாட்டாளர்களின் கழுத்திற்கு கத்தி வந்திருக்கிறது. இதற்கு மேலுமா அமைதியாய் இருந்து கடக்கப் போகிறோம்.

இந்த காட்டாட்சி அடக்குமுறைக்கு எதிராக மே பதினேழு இயக்கம் தொடர்ந்து செயல்படும். சிறிதும் அஞ்சப் போவதில்லை.

தமிழக ஜனநாயக சக்திகளே! இன்னும் என்ன மவுனம். நாடு முழுதும் ஜனநாயக சக்திகளை திரட்டுவோம். மோடி அரசின் காட்டாட்சி தர்பாருக்கு நீதி கேட்போம்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்!

Leave a Reply