தோழர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கண்டன அறிக்கை !!

- in பரப்புரை

தோழர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கண்டன அறிக்கை !!

மே பதினேழு ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி . தமிழக அரசரே முன்னின்று நடத்திய தூத்துக்குடி படு கொலையை ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்து விட்டு திரும்பிய போது பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்ய பட்டுள்ளார் தமிழக அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் கண்டனத்துக்குறியது

தூத்துக்குடி துபாக்கி சூடு சேலம் எட்டு வழி சாலை உள்ளிட்ட பல அழிவு திட்டங்கள் குறித்து பொது மக்கள் மத்தியில் பேசி வரும் செயற்ப்பாட்டளர்களை மிரட்டுவது கைது செய்வது துன்பறுத்துவது போன்ற செயல்களை தமிழக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை கூட தமிழ் நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா ? அல்லது போலீஸ் ஆட்சியா ? என்று கேள்வி எழுப்பி உள்ளது அந்த வகையில் தற்போது முற்றிலும் பொய் வழக்குகளின் அடிப்படையில் தோழர் திருமுருகன் காந்தி கைது செய்ய பட்டுள்ளார்

அவரை உடனடியாக விடுதலை செய்து அவர் மீது போடபட்டிருக்கும் பொய் வழக்குகளை கை விட வேண்டும் என தமிழக அரசே வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் !!

என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் கண்டன அறிக்கை விடுத்து உள்ளார் !!

INTJ ஊடக பிரிவு !!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் திரு எஸ்.எம்.பாக்கர் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply