திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களின் அறிக்கை

- in பரப்புரை
திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களின் அறிக்கை

திருமுருகன் காந்தி கைது கண்டிக்கத்தக்கது!
————————–————————–———————
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு உள்பட பல்வேறு மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளைப்பற்றிப் பேசியதன் அடிப் படையில், ஜெனீவாவிலிருந்து திரும்பிய நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மனித உரிமைக் கவுன்சிலில் பேசியதே மனித உரிமைக்கு எதிரானதா? இத்தகு ஜனநாயக விரோத விபரீத நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.


– கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.8.2018

திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

Leave a Reply