தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு கோவை ராமகிருட்டினண் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை

- in பரப்புரை

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு கோவை ராமகிருட்டினண் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை:

“ஸ்டெர்லைட் ஆலை பற்றியும்,தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றியும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது,,

காவல்துறையை வைத்து அவரின் செயல்பாட்டினை முடக்க முயற்சிப்பது ஜனநாயக விரோதமான செயலாகும்,,,இதன் மூலம் தமிழக அரசாங்கம் தான் தமிழக மக்களிடம் அம்பலப்பட்டு நிற்க வேண்டி வரும்,,,எனவே தோழர் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்,,அனைத்து ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து இக்கைதை கண்டிக்க கேட்டுக் கொள்கிறோம்”

-கோவை கு.இராமகிருட்டிணன்
-பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு கோவை ராமகிருட்டிணன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply