திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கண்டன அறிக்கை

திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டுள்ள் கண்டன அறிக்கை:

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை இன்று பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அதிகாலையில் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைதுச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மனித உரிமை காப்பாளர்கள் குறித்த ஐ நா வின் நெறிமுறைகளை மீறி மோடி அரசும் எடப்பாடி அரசும் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஐ நா வின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும்.

உடனடியாக திருமுருகன் காந்தி விடுதலைச் செய்யப்பட வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் திரு.ஜவாஹிருல்லா அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply