மதுரை – சிலைகளைக் கடத்தும் கும்பல்களில் இந்துத்துவ கும்பல்களின் பங்கு பற்றி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் ,14-ஜூலை, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சிலைகளைக் கடத்தும் கும்பல்களில் இந்துத்துவ கும்பல்களின் பங்கு பற்றி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம். 


தமிழர்களின் தொன்ம கலைப்பொருட்களை திருடி விற்கும் கும்பல் மீதான முழுமையான விசாரணை தேவை. அவை கடவுள் சிலைகள் என்பதால் அல்ல.. அவையனைத்தும் தமிழரின் தொன்ம கலைச்செல்வங்கள். இன்று சிலைகள் காணாமல் போகும், நாளை அரிய தொல்லியல் சின்னங்கள் காணாமல் போகும்…

சிலை திருட்டு என்பது நம் வரலாறு திருடப்படுவதற்கு ஒப்பானது. கீழடியை அகழாய்வு செய்யாமல் மறைக்கிறார்கள் எனில், வரலாற்று சின்னங்களை காணடிக்கச்செய்து வரலாற்று- கலை-அறிவியல் நுணுக்க ஆதாரங்களை அழிக்கிறார்கள். இச்சிலைகளுடன் காணாமல் போன நம் வரலாறுகள் நமக்கு தெரியாது.. இச்சிலைகளுடன் காணாமல் ஆக்கப்படும் கலைப்படைப்புகளின் ஆளுமை நம் சந்ததிகளுக்கு சொல்லப்படாமல் சாகடிக்கப்படும்.,

மேற்குலகில் டா வின்சி, மைக்கலேஞ்சலோ போன்ற சிறப்பான ஆளுமைகளின் படைப்புகளுக்கு ஒப்பான, அதற்கும் முந்தய படைப்புகள் களவு போகின்றன எனில் அதன் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதே போன்று மேற்குலகில் படைப்புகள் களவு போயிருந்தால், இந்நேரம் சர்வதேச செய்திகளாக்கப்பட்டிருக்கும். சர்வதேச தேடுதல் வேட்டை நடத்தப்பட்டிருக்கும்.

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. தமிழரின் படைப்புலக வரலாறுகள் மீட்கப்பட வேண்டும். கொள்ளையடித்த இந்துத்துவ கும்பல்கள், சாமியார்கள் என அனைத்து அயோக்கியர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், கலைப்பொருட்கள் மீட்கப்பட வேண்டும்.

இது திருட்டுக்குற்றச் செயலுக்கு எதிரான போராட்டமல்ல. காவிக்கும்பல்களின் கள்ளத்தனத்தை அம்பலப்படுத்தவும், தமிழரின் தொல்லியல் பொருட்களை மீட்கவும் நடத்தப்படும் போராட்டம்.

14-7-2018 , சனிக்கிழமை மலை 4 மணி. மதுரை, TM கோர்ட், கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகில்.

அவசியம் வருக.

மே17 இயக்கம்.

Leave a Reply