விடுதலை ஓவியம் தீட்டுவோம்!

வெற்றிடத்தில் விடுதலைக் கதைகளை பரவிடச் செய்வோம்!
வெள்ளைக் காகிதத்தில் சுதந்திர வேட்கையினை ஓவியமாய் தீட்டிடுவோம்!
சிவந்த தமிழீழத்தின் விடுதலை மூலம் அடிமை இருளினை விலகிடச் செய்திடுவோம்!

மனித நேயத்தின் மீதும், இயற்கை நீதியின் மீதும் பெரு விருப்பம் கொண்டோர் அனைவரும் கூடுவோம். 
இது நமது கடல். நமது ஓலம் சுமந்த கடல். நமது கண்ணீரினையும், புலம்பலையும், அழுகையினையும், விடுதலை வேட்கையினையும் இந்தக் கடலும், காற்றும் தான் சுமக்க வேண்டும்.

தமிழர் கடற்கரையான மெரீனாவில் கூடுவோம். மே 20, ஞாயிறு மாலை 4 மணி, கண்ணகி சிலை அருகில்.

– மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply