தமிழர்களை கொச்சைப்படுத்திய நியூஸ் X தொலைக்காட்சியை கண்டித்து போராட்டம்

- in ஆர்ப்பாட்டம்

தமிழர்களை hypocrites என்று சொல்லி கொச்சைப்படுத்திய நியூஸ் X தொலைக்காட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி அங்கு திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். காவல்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நியூஸ் X நிறுவனம் அலட்சியம் காட்டி வந்தது. பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், SDPI தோழர்கள், மனிதநேய மக்கள் கட்சி தோழர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சி தோழர்கள், மே பதினேழு இயக்க தோழர்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தோழமை அமைப்புகளின் தோழர்களும் பெருமளவில் அலுவலகத்திற்கு வெளியில் வந்து சேர்ந்தனர். 


பின்னர் நியூஸ் X நிறுவனம் மயிலாப்பூர் DC முன்னிலையில் நியூஸ் X editor நாளை அதே நிகழ்ச்சியில் இதற்கு மன்னிப்பு கோருவார் என கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் தோழர்கள் போராட்டத்தை முடித்துப் கொண்டு வெளியேறினர்.


மன்னிப்பு கோராத பட்சத்தில் நியூஸ் X நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது. 


மன்னிப்பு கேட்க தவறினால் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply