கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்கு வந்திருக்கிறோம்…

- in பரப்புரை

கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்கு வந்திருக்கிறோம்…

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கைது செய்ய வந்த காவலர்கள், காவலர் உடுப்பிலோ, அடையாள அட்டையினை காண்பித்தோ உள்நுழையவில்லை. வழக்கறிஞருக்கோ , நண்பர்களுக்கோ விவரம் சொல்ல அனுமதிக்கவில்லை. அவர் கிட்டதட்ட கடத்தப்பட்டிருக்கிறார். எங்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் எனவும் இதுவரை தெரியவில்லை. அவரது கணிணி, மொபைல் போன் உட்பட பலவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
அவர் குடும்பம் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. வன்முறை வெறியாட்டம் ஆடும் எடப்பாடி அரசு, காவல்துறை, பாஜக என அனைத்தும் ஒர் அணியில் நிற்கிறார்கள். மக்களுக்காக போராடும் நாம் அனைவரும் ஓர் அணியாக திரள்வோம்.

வழக்கறிஞர் தோழர்கள் இது குறித்து சட்டரீதியான முன்னெடுப்புகளை செய்ய முன்வாருங்கள். நெல்லையில் இருக்கும் தோழர்கள் தொடர்பு தேவை

கார்ட்டூனிஸ்ட் பாலாவை எந்த காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் எனும் விவரத்தை பெற தோழர்கள் உதவி வேண்டும்.

தோழர்.கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய் எனும் முழக்கம் வலுப்பெறட்டும்.

Leave a Reply