தோழர்களை வரவேற்க புழல் சிறை முன்பு திரள்வோம்.

அன்பான தோழர்களே,

தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் நேற்று (19.09.17) இரத்து செய்யப்பட்டு விட்டதால் தோழர்கள் இன்று (20.09.17) புழல் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார்களென்று ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

அதன்படி இன்று மதியம் 12.30மணி அளவில் தோழர்களை வரவேற்க பெருந்திரளான தோழர்கள் புழல் சிறை வாயிலுக்கு வரவேண்டுமாய் உரிமையோடு அழைக்கின்றோம்.

நமக்காக போராடி சிறை சென்றவர்களுக்கு அதுதான் மேலும் மேலும் தொடர்ந்து போராட உத்வேகத்தை கொடுக்கும் என்பதால் பெருந்திரளாக கலந்து கொள்வோம். அவசியம் அனைவரும் வாருங்கள்.

குறிப்பு: தோழர்களை வரவேற்க வரும் தோழர்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமலும் இருசக்கர வாகனத்தில் வருவோர் கட்டாயம் தலைகவசம் அணிந்து பாதுகாப்பாக வருமாரும்,மேலும் புழல் சிறை வாயிலில் வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் இருக்காது எனவே பாதுகாப்பான இடங்களில் வாகங்களை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply