தமிழ் வழிக் கல்வியை மறுக்கும் தமிழக அரசை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்குநரகம் (DPI) முன் தமிழ் வழிக்கல்வி கூட்டியக்கம் சார்பில் பெருந்திரல் ஆர்ப்பாட்டத்தில் மே17 இயக்கம் பங்கேற்ப்பு.

- in பரப்புரை
தமிழ் வழிப் பள்ளிகளை மாற்றாதே, தமிழ் மொழியை அழிக்காதே என இன்று(28-5-13) தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கொடு, அரசுப் பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார்.  மல்லை சத்யா,விடுதலை ராசேந்திரன், தோழர் தியாகு,பேரா.கல்விமணி, தோழர்.திருமுருகன் மற்றும் பல்வேறு கட்சிகள், இயக்கங்களை சேர்ந்த தோழர்களும், கல்வியாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அனைத்து தோழர்களும் கைது செய்யப்பட்டு பின்பு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Leave a Reply