அமெரிக்காவின் சதியும்,ஈழவிடுதலையும்

- in பரப்புரை

ராபர்ட் ஓ பிளேக். –அமெரிக்காவின் தெற்காசியாவிற்கான துணைச் செயலாளர். 


ஈழ ஆதரவாளர்கள் இவரைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். விடுதலைப்புலிகளை 2000இல் இருந்து முடக்குவதற்கான அமெரிக்க செயல்திட்டத்தினை வடிவமைத்து செயலாற்றியதிலும் பெரும் பங்காற்றியவர்.

சர்வதேச ஆதரவினை இலங்கை அரசிற்கு ஏற்படுத்தியதிலும், புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்ததிலும், உலக அளவில் தடையை கொண்டுவருவதிலும் இவரது பங்கினை மறுக்க இயலாது. அமெரிக்காவின் தெற்காசிய கொள்கையினை வடிவமைப்பதில் செயலாற்றுபவரும், புஷ் அரசு, ஒபாமா அரசு என அனைத்திலும் தமது கருத்துக்களைக் கொண்டு வழிநடத்துவதில்முக்கியமானவர். தமிழீழ கருத்தாக்கத்திற்கு எதிர் நிலை எடுத்தவர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதை முன்னிலைப்படுத்துபவர். கடந்த செப்டம்பர்2013 வரை இவரே இப்பகுதியின் அதிகாரியாக இருந்தவர்.

இவர் கடந்த வருடம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு சொன்னதை உங்களுக்கு நினைவுபடுத்துவது அவசியம்.

’இலங்கை அரசே குற்றங்களை விசாரிக்கவேண்டும்’ என்று தீர்மானம் கொண்டு வந்துவிட்டு, தாங்கள்தான் தமிழர்களை காக்க வந்த தேவதூதர்கள் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தவர்கள்,அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து தமிழகம் எங்கும் போராட்டங்கள் பற்றிப்படர்ந்ததும், அப்படியே பல்டி அடித்து,’தீர்மானத்தில் இந்தியாவே மாற்றங்களை கொண்டு வருகிறது, – (ஆகவே இந்தியாவினை மட்டும் எதிர்த்து குரல் கொடுங்கள்) ’ என்பதாக பேட்டி கொடுத்தவர்.

இந்தியா தீர்மானத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு முன்பாகவே பலவீனமான இலங்கை ஆதரவு, புலிகள் எதிர்ப்பு தீர்மானமே அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. அத்தீர்மானத்தில் “இலங்கை அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்கிற பகுதிகளை இந்தியா கொண்டுவந்தது. பலவீனமான தீர்மானத்தினை மேலும் நீர்த்துப் போகச் செய்தது.

இவரது கடந்த கால செயல்பாடுகளையும், இலங்கை அரசின் மீதான நிலைப்பாட்டினையும் தொடர்ச்சியாக உங்களுக்கு அம்பலப்படுத்துகிறோம். அமெரிக்காவின் தெற்காசிய-தமிழீழம் சார்ந்த கொள்கைகளை புரிந்து கொள்ள இது பெருமளவில் உதவும்.

இந்த அதிகாரிகள் வடிவமைத்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஈழ ஆதரவு போராட்டங்கள் திசை திருப்புகின்ற முயற்சியை காண்கிறோம். தொடர்ச்சியாக ஆதாரங்கள் அடிப்படையில் பேசலாம். 



திருமுருகன் காந்தி
மே 17 இயக்கம்

Leave a Reply