லியோ சீமான்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக ஆஸ்திரேலிய துணைதூதரகத்தில் மனு

- in பரப்புரை
இனக்கொலை அரசிடமிருந்து தப்பி, தஞ்சமடைந்த ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகிறது ஆஸ்திரேலிய அரசு. ஜூன் 1ம் தேதி லியோ சீமான் பிள்ளை என்ற தமிழர் ஆஸ்திரேலிய அரசு நாடு கடத்த இருப்பதால் தீக்குளித்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் தமிழகத்திலுள்ள அப்துல்லாபுரம் முகாமில் வசித்து வருகிறார்கள். லியோ சீமான்பிள்ளைக்கு இறுதி மரியாதையை நிகழ்த்துவதற்காக ஆஸ்திரேலியா செல்ல விசா அனுமதி கோரி அவரது குடும்பத்தினர் சார்பாக ஆஸ்திரேலிய துணைதூதரக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்த லியோ சீமான்பிள்ளையின் உடலைக் காண அனுமதிக்காக அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

 

Leave a Reply