மொழி உரிமைக்கான நிகழ்வுகள் – மதுரை

- in பரப்புரை
நம் மொழி உரிமைக்காக மதுரையில் நடக்கும் இரண்டு நிகழ்வுகள். திரளாக கலந்து கொள்வோம். நம் மொழி உரிமையை மீட்போம்

உலகத் தாய் மொழி தினத்தில் (பிப் 21) மதுரையில் நடந்த தமிழ் வழிக் கல்வி பேரணியில் தோழர்.பொழிலன் (தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்), ஐயா. பரந்தாமன் (தமிழர் தேசிய முன்னணி), தோழர். கணியமுதன் (விடுதலை சிறுத்தைகள்), தோழர். பேரறிவாளன் (தமிழ் புலிகள் இயக்கம்), தோழர். பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தோழர். நசீர், தோழர். அழகர்சாமி, தோழர். தளபதி (திராவிடர் விடுதலை கழகம்), தந்தை பெரியார் திராவிடர் கழகம் ( தோழர். தமிழ் பித்தன், தோழர். கிட்டு ராசா), தோழர். பிலாலுதீன் (SDPI), நாணல் நண்பர்கள் (தோழர். பூபதி ராசு, தோழர். சாதிக் ), தோழர். செல்வம் & ஆதித் தமிழர் பேரவை தோழர்கள் , வழக்கறிஞர் பகத் சிங் , தோழர். வரதராசன், தோழர். முரளி (மதுரைக் கல்லூரி முதல்வர்), தோழர். ரபீக் ராஜா (இளந்தமிழகம் இயக்கம் ), தோழர்.குமுந்தன் ( தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் ) தோழர். மனுவேல் & தோழர். அகராதி (ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம்),
ஐயா. நன்மாறன் (Ex.MLA), தோழர். திருமுருகன் காந்தி & மே 17 இயக்கத் தோழர்கள்.
பொதுமக்கள் , பெண்கள், குழந்தைகள் என பலரும் பங்கேற்றனர். தோழர். உமையர் பாகம் மற்றும் தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் ஒருங்கிணைத்த இந்த பேரணியை தமிழறிஞர். தமிழண்ணல் தொடங்கி வைத்தார்.
தமிழ் வழிக் கல்விக்கான அவசியத்தை பொதுமக்கள் , பெற்றோர் மத்தியில் பிரச்சாரம் செய்ய அனைத்து அமைப்பினரும் உறுதி பூண்டனர்.


Leave a Reply