குண்டர் சட்ட வழக்கின் தீர்ப்பு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

- in பரப்புரை

குண்டர் சட்ட வழக்கின் தீர்ப்பு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், மற்றும் அருண் குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கானது, அரசு தரப்பில் பல்வேறு வாய்தாக்கள் பெற்று இறுதியாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டு தரப்பிலும் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன. நமது தரப்பு வழக்கறிஞர் குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காக வாதங்களை எடுத்துவைத்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply