

மக்கள் உரிமைகளுக்காக போராடி வரும் இயக்கங்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை, அரசியல் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி, மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பாக, வரும் மார்ச் 6 சனிக்கிழமை மாலை திருச்சி உழவர் சந்தை திடலில் வைத்து, ‘அறப்போராட்டங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு’ என்ற முழக்கத்தோடு, மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்கப் பேரணி-மாநாடு நடைபெறவிருக்கிறது.
கட்சி, சாதி, மத எல்லை கடந்து தமிழினத்தின் உரிமைக்காக போராடிய அனைவரும் திரள்வது மட்டுமல்ல, இதற்கு ஆதரவளிக்க பொதுமக்களும் குடும்பத்தினரோடு பங்கேற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் சார்பாக தோழமையுடன் அழைக்கின்றோம்.
மே பதினேழு இயக்கம்
9884072010