தமிழ்த்தேசியம் – காலத்தின் கட்டாயம் – கருத்தரங்கம் – மதுரை

தமிழ்த்தேசியம் – காலத்தின் கட்டாயம் என்ற கருத்தரங்கம் தமிழ்த்தேச நடுவத்தின் சார்பில் ஜூலை 19 அன்று மாலை மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியத்திற்காக தொடர்ச்சியாக நீண்ட காலமாக போராடி வரும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பரப்பப்படும் திரிபுவாதங்கள் குறித்தும், ஆரோக்கியமான தமிழ்த்தேசியம் எப்படி அமைய வேண்டும் எனவும் முக்கியமான உரை நிகழ்த்தினர். தோழர்கள் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் பொழிலன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தோழர் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் இயக்கத் தோழர் கி.வே. பொன்னையன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் தோழர் தமிழழகன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் அருள்முருகன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர். மேலும் இக்கருத்தரங்கம் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெற உள்ளது.

10984562_1136410106376447_8765377725764014144_n 11011897_1136410663043058_3966457771605453102_n 11264891_1136410169709774_5747889988555046085_n  11707511_1136410313043093_7934901586277453763_n 11742631_1136410856376372_5626403763854747433_n 11742903_1136410576376400_9092049770208420496_n 11745456_1136410409709750_5314954723579250800_n 11752541_1136410493043075_3463135720131200771_n