இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கோவை இராமகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் வினோத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் பகலவன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் தோழர்கள் பங்கேற்றனர். இதில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் கண்டன உரையாற்றினார்.
]]>தமிழக அரசே! சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றிடு.
ஆணவப் படுகொலையில் ஈடுபடும் குடும்பத்தினர் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்திடு. அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்திடு.
சாதி மறுப்பு செய்தவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிடு.