சென்னை போரூர் ஏரியின் ஒரு பகுதியை தனியாருக்கு (இராமசந்திரா மருத்துவமனைக்கு) தாரைவாக்க தமிழக பொதுப்பணித்துறையால் ஏரியின் குறுக்கே போடப்பட்டிருந்த மணல் தடுப்பை உடனடியாக நீக்க வேண்டுமென்று கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சென்னையிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை போருரில் உள்ள ஏரியானது சென்னையின் பல பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.அப்படிப்பட்ட அந்த ஏரியை அரசியல் சுயநலத்திற்காக முற்றிலும் மூட தொடர்ந்து ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகள் முயன்று வருகின்றன.அதாவது 1912ஆம் ஆண்டின் கணக்குபடி 823 ஏக்கர் பரப்புளவில் 82மில்லியன் கன அடி தண்ணிரை தேக்கக்கூடிய அளவு இருந்த ஏரி.இன்று பதியாக ஆக்கிரமிக்கப்பட்டு வெரும் 46மில்லியன் கன அடி தண்ணிரைத்தான் தேக்கிவைக்க முடிகிறது.
இப்படி ஏற்கனவெ சீரழித்தது பத்தாதென்று அந்த ஏரியின் ஒரு பகுதியை இராமசந்திரா மருத்துவமனைக்கு எம்.ஜி,ஆர் கொடுத்து விட்டார் என்று சொல்லி ஏரியின் குறுக்கே மணலை கொட்டி ஏரியை மூடும் வேலையை கடந்த ஜீலை மாதம் தமிழக அரசின் பொதுப்பணித்துறை முன்னிற்று செய்தது. இதனை அறிந்த மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கங்களும் சில அரசியல் கட்சிகளும் அதனை கடுமையாக எதிர்த்தோம் .குறிப்பாக மே 17 இயக்கமாகிய நாம் தொடர்ந்து பலகட்ட தொடர் பிரச்சாரங்களை முன்னேடுத்தோம். அது
இப்படி பல்வேறு கட்ட தொடர் போராட்டத்தின் விளைவாக மேகநாதன் எனபவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி கடந்த டிசம்பர் 24ஆம் தேதி போரூர் ஏரியின் குறுக்கே போட்டப்பட்டிருக்கும் மணல் தடுப்பை உடனடியாக அகற்ற வேண்டுமென்று நீதிபதிகள் மிகமுக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு போடப்பட்டிருக்கும் மணல் தடுப்பை உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் ஏரியை ஆக்கிரமித்துள்ள மற்ற இடங்களை அடையாளம் கண்டு அதனையும் உடனடியாக மீட்டு போரூர் ஏரியை பாதுகாக்க வேண்டும்.
மே 17 இயக்கம்
]]>