குஜராத் மாடலை ஊக்குவிக்க ஒன்றிய அரசிடமிருந்து நேரடியாக தனியார் நிறுவனங்களுக்கு 2019-20 ல் வழங்கப்பட்ட தொகை ரூ.837 கோடி நிதி என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.
தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசுத் துறை நிறுவனங்களுக்கும் சட்டமன்றத்தின் வரவு செலவு அறிக்கைகளில் வராமல் நிதிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசிடம் இருந்து நேரடியாக பெருமளவு நிதியைப் பெற்ற குஜராத்தில் செயல்படுத்தும் நிறுவனங்களில், மாநில அரசு நிறுவனங்கள் (ரூ. 3,406 கோடி), மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (ரூ. 3,389 கோடி), மத்திய அரசு நிறுவனங்கள் (ரூ. 1,826 கோடி) ஆகியவை அடங்கும். மற்றும் அரசு மற்றும் தன்னாட்சி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் (ரூ. 1,069 கோடி) ஆகியவை அடங்கும்.
ரூ.16500 கோடி அளவிற்கான திட்டங்களை குஜராத் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணத்தின் போது அறிவித்தார் மோடி. அதற்குப் பிறகே தேர்தல் நாளை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
உயர் ஆதிக்க சாதியினரின் கடைகளில் 96.8% பேர் தலித்துகளுக்கு தேநீர், உணவுப் பொருள் பரிமாற தனித்தனி பாத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். மாநிலம் முழுவதும் தலித்துகளுக்கு எதிராக 98 வகையான தீண்டாமை உயர்சாதி சமூகங்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தலித் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு 53.8% அரசு தொடக்கப் பள்ளிகளில் அதிகமாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது.
இலவசங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சி சீரழிவதாக மிகவும் வருந்தியவர் தான் மோடி. அது மட்டுமல்லாமல் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாசகவின் வழக்கறிஞரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வளவு கடுமையாக எதிர்த்தவர்கள் தான் தேர்தல் அறிக்கையில் இலவசக் கல்வி, கிரைண்டர், சிலிண்டர், மருத்துவம், பெண்களுக்கு இலவச பைக், குறைந்த விலை எண்ணெய் என இலவசங்களை அள்ளியிறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டது. கொஞ்சமும் கூச்சமேயில்லாமல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்கும் மோடியும், பாசகவினரும் எழுப்பும் வீர முழக்கமே குஜராத் மாடல்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
மின்சார துறையை தனியார் மையமாக்குவதை கண்டித்தும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடிப்பது, துன்புறுத்துவதை தடுக்கத் தவறும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக, இன்று (02-12-2022 வெள்ளி) மாலை 5 மணி அளவில், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
பொதுமக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையை குறைத்த இலாபவெறி கொண்ட GVK-EMRI நிறுவனத்திடமிருந்து பாதுகாத்திட, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக, 16-10-2022 அன்று சென்னை தேனாம்பேட்டையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>ஓ.என்.ஜி.சி.யை நோக்கி தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் சிறுவிவசாயிகளுக்கு எதிராக ஒப்பந்த தொழிலாளர்களை நிறுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள். இவ்வகையில் உழைக்கும் வர்க்கத்தினரை, பாட்டாளிகளை கூறுபோட்டு எதிரெதிராக நிறுத்துவது ஓ.என்.ஜி.சி.க்கும், இப்பகுதிக்கு வர முயலுகின்ற பெருநிறுவனங்களுக்கும் வாய்ப்பான சூழலை கொண்டுவரும் என்பது புரியாதவர்கள் அல்ல கம்யூனிஸ்ட் கட்சியினர்.
வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் திடீர் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தொடர் மின்வெட்டுகள் ஏற்பட்டன. இந்தப் பற்றாக்குறையை காரணம் காட்டி, தேசிய அனல் மின் நிலையம் (NTPC) 5.75 மெட்ரிக் டன் அளவிற்கு, ரூபாய் 8,422 கோடி மதிப்புள்ள நிலக்கரியை இறக்குமதி செய்ய அதானி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. …இந்த கொள்ளையின் சுமையை மாநில மின்வாரிய நிலையங்கள் சுமக்கின்றன. அதனால் அதிகரிக்கும் மின் கட்டணம் ஊடாக மக்கள் மீது விழுந்து அந்த சுமையை மக்கள் சுமக்கிறார்கள்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9884864010
தமிழ்நாடு மின்சார வாரியம் நீண்டகால உழைப்பினால் உருவாக்கி வைத்திருக்கும் மின்விநியோக கட்டமைப்புகளை மலிவுவிலையில் அல்லது சலுகையில் அதானி, அம்பானி போன்ற மார்வாடிகளுக்கு தாரை வார்க்க வேண்டுமென்கிறது பாஜகவின் புதிய சட்டம். மேலும், இச்சட்டத்தை, உழவர் மசோதாவைப் போலவே மாநிலங்களிடத்தில், தொடர்புடையவர்களிடத்தில் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக தனது குஜராத்தி மார்வாடி-பனியா முதலாளிகளின் லாபத்திற்காக பாஜக கொண்டுவருகிறது.
வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9884864010
அலைக்கற்றை விற்பனை என்பது அரசின் எதிர்பார்ப்பை விட மிகக்குறைந்த அளவில் விற்பனையாவதற்கான காரணமென்பது, இந்நிறுவனங்கள் தமக்குள்ளாக மொத்த சந்தையையும் பகிர்ந்துகொண்டு திட்டமிட்டு அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதையே இன்று காண்கிறோம்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
‐—————————————————–
தனியார் பள்ளிகள் மீதான வெகுமக்களின் நீண்டநாள் அதிருப்தியின் வெளிப்பாடாகவே கள்ளக்குறிச்சியில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. கொரொனோ தொற்றுக்காலத்தில் இப்பள்ளிகள் நடத்திய வசூல் கொள்ளை, குழந்தைகளை வைத்து நடத்திய சுரண்டல் என நீண்ட பட்டியல் உண்டு. கொரோனோ உருவாக்கிய வேலையிழப்பு, பொருளாதார இழப்பு என பல்வேறு நெருக்கடிகளைக் கடக்க இயலாத நிலையில் துவளும் பெற்றோர்கள், தொடர் செய்தியாக இதே போன்று பள்ளிக்குழந்தைகள் மீது வளாகங்களில் நடக்கும் வன்முறைகள் என தொடர்ந்து நிகழும் அநீதிகளின் தொகுப்பாகவே மக்கள் போராட்டம் நிகழ்கிறது. துறையூர் அருகே சில மாதங்களுக்கு முன்பு இதே போல நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவி சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து போனது உட்பட இப்போராட்டம் பல நிகழ்வுகளின் வெளிப்பாடே.
இதே போன்று சென்னையில் நடக்கும் வீடு இடிப்புகள், ஆக்கிரமிப்பினை அகற்றுகிறோம் எனும் பெயரில் சாமானியர் மீது நடக்கும் அரச கொடுமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளது. உச்சநீதிமன்றமும் சாமானிய மக்களின் மீது தங்களது தீர்ப்புகளை எழுதி தம்மை நேர்மையான, கடுமையான அமைப்பு என கட்டமைக்கிறது.
காவல்துறை, கலெக்டர், தாசில்தார் என விரியும் அதிகாரவர்க்கமும், நீதித்துறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகள். இவைகள் அரசியல்படுத்தப்படாத அதிகார மையங்கள். மக்களோடு தொடர்பற்றும், மக்களுக்கு பதில்சொல்லவேண்டிய நெருக்கடியற்று தன்னிச்சையாக இயங்குகின்றன. இந்நிறுவனங்களின் வரம்புமீறல்களை, சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை கேள்வி எழுப்ப வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மெளனம் காப்பதும், கொள்கை முடிவெடுக்காமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதாலேயே இது போன்ற போராட்டங்கள் தவிர்க்க இயலாததாகிறது.
கள்ளக்குறிச்சியில் நடக்கும் போராட்டத்தை வன்முறை என மட்டும் சுருக்குவது அதிகாரவர்க்கத்தின் கையாலகத்தன்மையைத்தான் சொல்லுகிறது. அதிகாரவர்க்கம் நடத்தும் கொள்ளை, மக்கள் விரோத செயல்பாடுகள், இந்துத்துவ மனநிலை, காவல்நிலைய மரணங்கள், எதேச்சதிகாரத்தினை இதற்கு மேலும் திமுக அரசு கட்டுப்படத்தாமலும், கேள்விக்குட்படுத்தாமலும் செல்லுமானால் திமுக மக்கள் ஆதரவை விரைவில் இழக்கும்.
மக்கள் நலத்தின் மீதான கொள்கைப்பற்று இல்லாத அதிகாரவர்க்கம் ஆபத்தானது, அதன் இயல்பிலேயே பாசிசத் தன்மை கொண்டது. அரசியல் சாசனத்தின் வரையரைகளை சூத்திரமாகவும், சட்டத்தினை கைவிலங்காகவும் மக்கள் மீது சுமத்தும் எவ்வகையான அதிகாரவர்க்கமும் வீழ்ந்து போகும்.
சென்னையில் நடக்கும் குடிசை அகற்றம், வீடு இடிப்புகளுக்கு எதிர்வினையாக பெரும் எழுச்சி நடக்கும் முன்னர் திமுக கண்களைத் திறந்தால் அவர்களுக்கு நல்லது. அதிகாரிகளின் முடிவுகளின் படியும், மக்கள் விரோத நீதிமன்ற தீர்ப்புகளின் படியே நடப்போம் என முடிவெடுத்தார்களெனில், எதேச்சதிகாரத்தின் கூட்டாளிகளாகவே மக்கள் உங்களை அவதானிப்பார்கள். இதே நிலை தான் அதிமுகவிற்கும் நடந்தது. நீதிமன்றங்களில் சாமானியர்களுக்கான கொள்கையை முன்வைத்து வாதாடுவதும், சமூகவிரோத அதிகாரிகளை அகற்றவதுமாக அரசியலை முன்னெடுக்கவேண்டிய காலமிது.
காவல்நிலையத்தில் நடக்கும் மரணங்கள், கொலைகளை தடுப்பதற்குரிய எவ்வித அக்கரையுமற்று இயங்கும் தலைமைக் காவலர், கள்ளக்குறிச்சியில் நடக்கும் போராட்டத்தை வன்முறை என்று மட்டுமே சுருக்குவது எவ்வகையிலும் அரசிற்கும், மக்களுக்கும் பயன்படாது.
இந்த அதிகாரிகளை முறைப்படுத்தி, மக்கள் சேவகம் செய்ய வைக்கவே சட்டமன்றமும், உறுப்பினர்களும், அமைச்சர்களும், முதலமைச்சர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதை நீங்கள் முறைப்படுத்தவில்லையெனில், மக்களே நேரடியாக போராட்டங்கள் மூலம் கேள்வி எழுப்புவார்கள்.
அதிகாரிகள், நீதிமன்றம் மக்களுடன் நிற்கவில்லையெனில், ஆட்சியாளர்கள் மக்களுடன் நிற்கவேண்டும். இச்சமநிலை மாறினால் மக்கள் தம் உரிமைக்காக களம் காண்பார்கள்.
தோழர் திருமுருகன் காந்தி ,
ஒருங்கிணைப்பாளர் மே பதினேழு இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் நிறுவுவதை எதிர்க்கும் மக்களின் 100வது நாள் (மார்ச் 31, 2022) தொடர் போராட்டம் வெல்லட்டும்!
* வளமான விவசாய நிலத்தை அழித்து சிப்காட் அமைக்காதே!
* 1500 ஏக்கர் விவசாய நிலம், 500 வீடுகளை அப்புறப்படுத்தாமல் தரிசு நிலத்திற்கு சிப்காட்டை இடமாற்றம் செய்திடு!
* கிராம சபையின் சிப்காட் எதிர்ப்பு தீர்மானத்தை அங்கீகரி!
* போராடும் பாலியப்பட்டு மக்களுக்கு ஆதரவளிப்போம். இயற்கையை காப்போம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
இந்திய ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்தம்
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை
1981 ஜூன் 4ஆம் தேதியன்று மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் தேசிய பரப்புரைக்குழு நடத்திய மாநாட்டில் தான் முதல் முறையாக ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்ததிற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. 1982 சனவரி 19 அன்று வேலைநிறுத்தம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து மாநில வாரியாக மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டன. ஒன்றியம் தழுவிய வேலைநிறுத்தத்தை ஒட்டி சுமார் 6000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசால் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க
]]>